சன் டிவி யில் ஆரம்பத்திலிருந்து தற்பொழுது வரை பல சீரியல்கள் சூப்பர் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கின்றன. அவ்வாறு சகோதர பாசத்தை மையமாக வைத்து ஓடிக்கொண்டிருக்கும் சீரியல் தான் வானத்தைப் போல.மேலும் பல பேர் சீரியலை திட்டி தீர்த்தாலும் இன்றளவும், டி.ஆர்.பி முதல் இடத்தில் இந்த சீரியல் இடம் பிடித்துள்ளது.
இந்த சீரியலில் ஆரம்பத்தில் வில்லனாக அறிமுகமாகி பின் ஹீரோவாக மாறியவர் தான் நடிகர் கார்த்திக். ராஜ பாண்டி கதாப்பாத்திரத்திற்கென்றே தனி ரசிகர் கூட்டத்தையே உருவாக்கி வைத்திருக்கிறார். ராஜபாண்டி துளசி லவ் சீன்காக சீரியல் பார்ப்பவர்களும் உள்ளனர்.
சமூக வலைத் தளத்தில் ஆக்டிவ்வாக இருக்கும் அவர், கடந்த சில நாட்களாகவே, கிப்ட்ஸ், லவ் கார்ட்ஸ் எல்லாவற்றையும் தொடர்ந்து அவருடைய ஸ்டோரியில் பதிவிட்டுக் கொண்டே வந்தார். விரைவில் தன் காதலை அறிவிப்பதாகவும் தெரிவித்திருந்தார்.
இந்தலையில் முதன் முதலாக தன் காதலியுடன் இருக்கும் புகைபப்டத்தை ரசிகர்களுடன் பகிர்ந்துள்ளார். அவருடைய பெயர் காயத்ரி என்றும், அவர் மேக்கப் ஆர்டிஸ்ட் என்றும் தெரியப்படுத்தியுள்ளார். இதனால் அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது.
Listen News!