தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டாராக பல ஆண்டுகளாக வலம் வருபவர் நடிகர் ரஜினி. கடந்த நாற்பது ஆண்டுகளாக தமிழ் சினிமாவின் வசூல் நாயகனாக திகழ்ந்து வரும் ரஜினிக்கு சமீபகாலமாக எதிர்பார்த்த வெற்றி கிடைக்கவில்லை. குறிப்பாக அவர் கடைசியாக நடித்த ஒரு சில படங்கள் தோல்வியை சந்திக்க அவர் மீது கடுமையான விமர்சனங்கள் பலவும் முன் வைக்கப்பட்டன.
அதாவது ரஜினி முன்பு போல் இல்லை அவருக்கு வயதாகிவிட்டது, இனி அவர் படங்கள் எதுவும் ஓடாது என்றெல்லாம் கடுமையாக விமர்சித்தனர். ஆனால் இதற்கெல்லாம் பதிலடி கொடுக்கும் வகையில் ரஜினி தற்போது அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகி தீவிரமாக நடித்து வருகின்றார்.
அந்தவகையில் இவர் நடிப்பில் தற்போது ஜெயிலர் படம் உருவாகி வருகிறது. நெல்சன் திலிப்குமார் இயக்கி வரும் இப்படத்தை எதிர்பார்த்து ரசிகர்கள் பலரும் காத்துகொண்டு இருக்கிறார்கள். இவ்வாறான ரஜினிகாந்தின் திரைவாழ்க்கையில் மிகப்பெரிய வெற்றியடைந்த திரைப்படங்களில் ஒன்று 'அண்ணாமலை'.
இப்படத்தை சுரேஷ் கிருஷ்ணா பிரமாண்டமாக இயக்கியிருந்தார். இப்படத்தில் இடம்பெறும் ஒரு காட்சியில் பாம்புடன் நடித்திருப்பார் நம்ம ரஜினிகாந்த். அந்த காட்சி செம அருமையான நகைச்சுவை காட்சியாக அமைத்திருந்தமை நம் அனைவருக்கும் தெரியும்.
அதில் விஷம் இல்லாத பாம்புடன் தான் ரஜினி நடித்தார் என்று ரசிகர்களுக்கு தெரியும். ஆனால் அந்த விடயம் உண்மை இல்லையாம். அன்று படப்பிடிப்பு நடந்தபோது கொண்டு வந்த பாம்பு விஷம் எடுக்காத ஒரு பாம்பு தானாம்.
இது அப்போது இயக்குநர் சுரேஷ் கிருஷ்ணாவிற்கு தெரியாதாம். படப்பிடிப்பு முடிந்த பின் தான் சுரேஷ் கிருஷ்ணாவிற்கு தெரியவந்ததாக அவரே பேட்டி ஒன்றில் கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமல்லாது நல்ல வேளையாக அன்று எதுவும் அசம்பாவிதம் நடக்கவில்லை என்றும் அவர் அப்பேட்டியில் தெரிவித்துள்ளார்.
Listen News!