• Sep 20 2024

சிகரெட் பிடிக்கச் செல்லும் போது ரஜினியும் கூட செல்வாராம்- சுவாரஸியமான தகவலைக் கூறிய சுந்தர்.சி

stella / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் முக்கிய இயக்குநராக வலம் வரும் சுந்தர்.சி தற்பொழுது  காஃபி வித் காதல் என்கிற படத்தை இயக்கிக் கொண்டிருக்கிறார். இப்படத்தில் இவருடன்  நடிகர்கள் ஜீவா, ஸ்ரீகாந்த், ஜெய், யோகி பாபு என ஒரு நட்சத்திர பட்டாளமே நடித்துக் கொண்டிருக்கிறார்கள். 

இந்நிலையில் அருணாச்சலம் திரைப்படத்தை தான் இயக்கிய போது நடந்த சுவாரசியமான நிகழ்வுகளை பகிர்ந்துள்ளார் சுந்தர்.சி


 ரஜினிகாந்த் ஒரு படம் நடிக்கலாம் என்று முடிவு செய்தபோது சுந்தர்.சியை அழைத்து நான் ஒரு படம் நடிக்கப் போகிறேன் அதனை நீங்கள் இயக்குகிறீர்களா என்று கேட்டாராம். உங்களிடம் கதை இருக்கிறதா உங்களுக்கு நான் வாய்ப்பு தருகிறேன் என்று தொணியில் பேசாமல் என் படத்தை நீங்கள் இயக்குகிறீர்களா என்று ரஜினி கேட்டது சுந்தர்.சிக்கு மிகவும் பிடித்துவிட்டதாம். அதன் பின்னர் துவங்கப்பட்டதுதான் அருணாச்சலம் திரைப்படம்.

புதிய இயக்குநர்களுடன் பணி புரிவது ரஜினிகாந்த்திற்கு மிகவும் பிடிக்கும். ஷூட்டிங் ஸ்பாட்டில் தனது அனுபவத்தை எல்லாம் அவர் காட்ட மாட்டார். இளம் தொழில்நுட்ப கலைஞர்களை கம்ஃபர்ட்டாக ஃபீல் செய்யும் வகையில் நடந்து கொள்வாராம். அருணாச்சலம் படத்தின் கேமராமேன் அவ்வப்போது சிகரெட் பிடிக்கச் செல்லும்போது ரஜினிகாந்தும் அவருடன் சென்று சிகரெட்டையும் கொடுத்து பற்ற வைத்து சகஜமாக பழகுவாராம். 


அதேபோல ஒரு விஷயம் தனக்கு பிடிக்கவில்லை என்றால் முதலில் நன்றாக இருக்கிறது என்று கூறுவாராம். பின்னர் ஒரு நாள் கழித்து பேசும்போது நீங்கள் சொன்ன விஷயத்தை யோசித்துப் பார்த்தேன் இந்த விஷயங்கள் இப்படி இருந்தால் எப்படி இருக்கும் என்று தான் சொல்வாரே தவிர நாம் சொன்னது நன்றாக இல்லை பிடிக்கவில்லை என்று ஒருபோதும் ரஜினி சொல்ல மாட்டார் என்று சுந்தர்.சி கூறியுள்ளார்








Advertisement

Advertisement