• Sep 20 2024

ரஜினிக்கு அது சுத்தமா தெரியாது- படையப்பா-வில் நடந்த ஒரு சுவாரசியமான சம்பவம் - கே.எஸ் ரவிக்குமார் சொன்ன சீக்ரெட்

stella / 1 year ago

Advertisement

Listen News!

விஜய் தொலைக்காட்சியிலிருந்து வெள்ளித்திரைக்குச் சென்று தமக்கென ஒரு அடையாளத்தை பிடித்திருக்கும் பிரபலங்கள் பலர் இருக்கின்றனர்.அவர்களில் சிவகார்த்திகேயன் & சந்தானம் என்று குறிப்பிடலாம் மற்றும் சமீப காலங்களில் பல நகைச்சுவை நடிகர்கள் தீனா மற்றும் புகழ் என பலர் திரையுலகில் சிறந்த திறமைசாலிகளாக தங்களை நிலைநிறுத்திக் கொண்டனர்.

இந்த வரிசையில் தகுதியான பெண் கதாநாயகியை தொலைக்காட்சித் துறைக்கு அறிமுகப்படுத்தும் வகையில், ‘கதா நாயகி’ என்ற புதிய ரியாலிட்டி ஷோ சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் ஒளிபரப்பாகி வருகின்றது. எட்டு முன்னணி போட்டியாளர்கள் இந்த நிகழ்ச்சியின் கதா நாயகி நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக தேர்ந்தெடுக்கப்பட்டனர். 


அவர்கள் தமது திறமையை வெளிப்படுத்தி வருகின்றனர். இப்படியான நிலையில் இதில் நடுவராக இருக்கு இயக்குநர் கே.எஸ் ரவிக்குமார் ஒரு விஷயத்தைக் கூறியுள்ளார். அதாவது படையப்பா படத்தில் மின்சாரப்பூவே பாடலின் கடைசியில் ஜதி சொல்வது வரும். அந்தப் பாட்டைக் கேட்ட ரஜினி எனக்கு ஜதி எல்லாம் வராது என்று சொன்னாரு.

அப்போ நான் உடனே எம்ஆர் ராதா சேர் ஒரு படத்தில பண்ணிய அந்த வீடியோவைப் போட்டுக்காட்டி சொன்னேன் எம்ஆர் ராதா சேருக்கும் ஜதி சொல்லத் தெரியாது ஆனால் அவர் முயற்சி பண்ணி பண்ணிட்டாரு. அது மாதிரி நீங்களும் ஒரு தடவை முயற்சி செய்து பாருங்க, நான் கமெராவை குளோசப்பில் வைக்கல, மேல, சைட்ல அப்பிடி மாறி மாறி வைச்சுக் கொள்ளுறேன் என்று சொன்னேன்.


முதலில் ட்ரை பண்ணினாரு அதுக்கு பிறகு சூப்பராக பண்ணிட்டாரு. அவரோட முயற்சி தன் அதுக்கு காரணம் .அதைப் பண்ணியே ஆகனும் என்ற துணிச்சல் தான் அவரை பண்ண வைச்சது. அதனால தான் அவரு சூப்பர் ஸ்டாராக வளர்ந்து நிற்கின்றாரு என்று ரஜினி பற்றிய ரவிக்குமார் கூறியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement