• Sep 21 2024

ரஜினியே இப்படி சொல்லி விட்டார் அப்பிறம் சொல்லவா வேணும்-கடும் ஆர்வத்தில் ரசிகர்கள்

stella / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் ரசிகர்கள் எதிர்பார்த்துக் காத்திருக்கும் முக்கிய திரைப்படங்களில் ஒன்று தான் இரவின் நிழல்.இப்படத்தினை பார்த்திபன் தானே இயக்கி தானே நடித்துள்ளார்.இப்படத்தில் இவருடன் வரலட்சுமி சரத்குமார், ரோபோ ஷங்கர் உள்ளிட்டோர் முக்கிய கேரக்டர்களில் நடித்துள்ளனர்.

இந்த படம் ஜுலை 15 ம் தேதி தியேட்டர்களில் ரிலீஸ் செய்யப்பட உள்ளது.எடிட்டரே இல்லாமல் சிங்கிள் ஷாட்டில் எடுக்கப்பட்ட உலகின் முதல் Non linear Single shot படம் என்ற பெருமையை இந்த படம் பெற்றுள்ளது. இதற்காக ஆசியா மற்றும் இந்திய சாதனை புத்தகத்தில் இரவின் நிழல் படம் இடம்பிடித்துள்ளது.

இந்நிலையில் தியேட்டர்களில் 5 மொழிகளில் ரிலீஸ் செய்யப்பட உள்ள இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். அவரது இசையில் 6 பாடல்கள் இடம்பெற்றுள்ளது.இரவின் நிழல் படத்தின் ப்ரீமியர் ஷோ நேற்று திரையிடப்பட்டது.

இந்நிலையில் படம் குறித்து பேசி ரஜினி பேசி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், பார்த்திபன், ஒரு வித்தியாசமான முயற்சிகள் செய்ய வேண்டும் என்று எப்போதும் துடிக்கும் ஒரு கலை ரசிகன். Non linear Single shot, உலகத்திலேயே இதுவரை யாரும் எடுத்ததே கிடையாது. 29 நிமிடங்கள் இந்த படத்தை எப்படி எடுத்தார்கள் என காட்டி இருக்காங்களாம். புல்லரிக்குமாம்.இந்த படம் கண்டிப்பாக நல்லா போகும் என ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.

பொதுவாக ஒரு படம் ரிலீசான பிறகு அதை பார்த்து விட்டு தான் ரஜினி அது பற்றி கமெண்ட் சொல்லி, பாராட்டி வருகிறார். ஆனால் இரவின் நிழல் படத்திற்கு படத்தின் ரிலீசிற்கு முன்பே படம் பற்றி பேசி வீடியோ வெளியிட்டுள்ளார் ரஜினி. ரஜினியே இப்படி சொல்லி இருக்கிறார் என்றால், அப்படி எப்படி இந்த படத்தை சிங்கிள் ஷாட்டில் எடுத்திருப்பார்கள் என பார்க்க ரசிகர்களும் ஆர்வமாக உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement