• Sep 20 2024

ரஜினி சேர் கடவுள் போன்றவர் என்னுடைய ஆசை இது மட்டும் தான்- ஓபனாக பேசிய பிசாசினி சீரியல் நடிகர்

stella / 1 year ago

Advertisement

Listen News!

கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல் தான் பிசாசினி. மிரினல் ஜா கதை மற்றும் திரைக்கதை எழுதியிருக்கும் இந்த சீரியலை சகுந்தலம் டெலி பிலிம்ஸ் மற்றும் எம்.ஏ.ஜே புரொடக்‌ஷன்ஸ் இணைந்து தயாரித்துள்ளன. தமிழிலும் டப் செய்யப்பட்டு ஒளிபரப்பாகும் இந்த சீரியலுக்கென்று தனி ரசிகர் பட்டாளமும் உள்ளது.

இந்நிலையில் பிசாசினி சீரியலில் ரக்‌ஷித் சிங் ராஜ்புட் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ஹர்ஷ் ராஜ்புட் தமிழ் பில்மிபீட்டுக்கு பிரத்யேக பேட்டி அளித்தார். அந்தப் பேட்டியில் பேசிய அவர், "பிசாசினி சீரியலுக்கு தமிழ்நாட்டிலும் நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது. அங்கிருந்து பலரும் எனக்கு மெசேஜையும் அனுப்பினார்கள். சமூக வலைதளங்களிலும் நல்லவிதமாகத்தான் பேசிக்கொள்கிறார்கள்.


நான் 19 வருடங்களாக நடித்துவருகிறேன். 16 வயதில் நடிக்க ஆரம்பித்தேன். நான் நன்றாக படிக்கக்கூடியவனாக இருந்தாலும் நடிகனாக வேண்டும் என்ற ஆசையில் குஜராத்திலிருந்து மும்பைக்கு வந்தேன். டிடி நேஷனலில் முதல்முறையாக நடிக்கும்போது நான் கல்லூரியில் படித்துக்கொண்டிருந்தேன். அதன் பிறகு பல டிவி நிகழ்ச்சிகளில் இருந்திருக்கிறேன். சில படங்களிலும் நான் நடித்திருக்கிறேன். பல ஏற்ற இறக்கங்களை நான் சந்தித்திருக்கிறேன். இது எனக்கு ரொம்பவே ஆர்வம் உள்ள பயணமாக இருக்கிறது.

நான் ஒரு கதையை பல காரணங்களுக்காக ஒத்துக்கொள்வேன். அதில் ரொம்பவே முக்கியமானது என்னுடைய கதாபாத்திரம்தான். அதேபோல் எனக்கு பிடித்தமான ஜானர் வந்தாலும் அதனையும் ஒத்துக்கொள்வேன். மேலும் ஆக்‌ஷன், எமோஷனல் உள்ளிட்ட விஷயங்களையும் நான் கவனிப்பேன். சிறந்தவர்களுடன் பணியாற்ற வேண்டும் என எப்போதுமே நான் நினைப்பேன். அதற்காக 200 சதவீதம் உழைப்பை கொடுப்பேன்.

தமிழிலோ அல்லது தென்னிந்தியாவில் இருந்தோ இதுவரை எனக்கு அழைப்பு வரவில்லை. ஆனால் அங்கு பணியாற்றுவதற்கு எனக்கு எப்போதுமே விருப்பம்தான். சினிமா என்பது சினிமாதான். அதற்கு மொழி இல்லை. இங்கு பணியாற்றுவது,. அங்கு பணியாற்றுவது என்பதில் எனக்கு உடன்பாடு இல்லை. சிறந்தவர்களுடன் பணியாற்ற வேண்டும் என்பதுதான் எனது ஆசை.


ரஜினிகாந்த்தை எனக்கு அவ்வளவு பிடிக்கும். அவரைவிட பெரிதானவர் இங்கு யார் இருக்கிறார். அவர் கடவுள் போன்றவர். அதேபோல் கமல் ஹாசன், ராம் சரண், ஜூனியர் என்.டிஆர் உள்ளிட்டோரையும் பிடிக்கும். நேரடி தமிழ் படத்தில் நடிப்பதற்கு எனக்கு எப்பவுமே விருப்பம்தான். மணிரத்னம், ராஜமௌலி,அட்லீ போன்றவர்களின் இயக்கத்தில் நடிக்க ரொம்பவே ஆசை" என்றும் தெரிவித்துள்ளார்.


Advertisement

Advertisement