• Sep 20 2024

ரஜனியே ஜெயிலர் ஷூட்டிங் தொடங்கும் தேதியை அறிவித்தார்-குஷியில் ரசிகர்கள்..!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

பீஸ்ட் படத்தின் விமர்சனங்களுக்குப் பிறகு இயக்குநர் நெல்சன் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை வைத்து புதிய படத்தை இயக்கவுள்ளார்.தலைவர் 169 என தற்காலிகமாக பெயரிடப்பட்டிருந்த இந்த படத்திற்கு ஜெயிலர் என டைட்டில் வைத்துள்ளதாக அறிவிக்கப்பட்டது.

சன்பிக்சர்ஸ் தயாரித்து வழங்கும் இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் துவங்கும் என்றும், அதன் அறிவிப்பு அதிகாரபூர்வமாக வெளியிடப்படும் என ரசிகர்கள் காத்துக்கொண்டிருந்தனர்.

ஆனால் அதைப்பற்றி எந்த ஒரு அறிவிப்பும் வெளியாகததால் பெரும் சோகத்தில் இருந்தார்கள் ரசிகர்கள்.ஆனால் சில தினங்கள் முன்பு டெல்லிக்கு சென்று திரும்பிய ரஜினியிடம் விமான நிலையத்தில் செய்தியாளர்கள் ஜெயிலர் படம் பற்றி கேட்டார்கள். அடுத்து ஷூட்டிங் தொடங்க இருக்கிறது என கூறிவிட்டு சென்றார் ரஜினி.

இந்நிலையில் தற்போது ரஜினி ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தும் படி ஒரு செய்தி வந்துள்ளது.இன்று ரஜினி தமிழக ஆளுநரை சந்தித்து பேசி இருக்கிறார். அதன் பின் செய்தியாளர்களை சந்தித்த ரஜினி இந்த சந்திப்பு மரியாதை நிமித்தமானது என்றும், அரசியல் பற்றி தான் பேசினோம், ஆனால் அது என்ன என்பதை சொல்ல முடியாது எனவும் ரஜினி கூறி இருக்கிறார்.

மேலும் ஜெயிலர் ஷூட்டிங் பற்றி பேசிய அவர், வரும் ஆகஸ்ட் 15 அல்லது 22ம் தேதி ஷூட்டிங் முழு வீச்சில் தொடங்கும் என கூறி இருக்கிறார்.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement