தமிழ் சினிமாவில் முக்கிய நட்ச்சத்திரமாக திகழும் ரஜினி அண்ணாத்த படத்திற்கு பின்னர் தற்போது நெல்சன் இயக்கத்தில் ஜெயிலர் படத்தில் நடித்து வருகின்றார். சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்க வசந்த் ரவி, ரம்யா கிருஷ்ணன், யோகி பாபு ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.
எனினும் தற்போது சென்னையில் இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது. மேலும் இப்படப்பிடிப்பை விரைந்து முடித்து அடுத்தாண்டு கோடை விடுமுறையில் இப்படத்தை வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.
இந்நிலையில் ரஜினி இப்படத்திற்கு சில கண்டிஷன்களை போட்டுள்ளதாக தற்போது இணையத்தில் தீயாய் ஒரு தகவல் கசிந்துள்ளது. அதாவது ரஜினியின் உடல்நிலை முன்பு போல் இல்லாததாலும், அவரின் வயதை கருத்தில் கொண்டும் படப்பிடிப்பு தளத்திற்கு ரஜினியுடன் அவரது மகள்கள் யாரது உடன் இருப்பார்களாம்.
அத்தோடு ரஜினி காலை 9 மணிக்குத்தான் ஷூட்டிங் வருவார் என்றும், இரவு நீண்ட நேரம் படப்பிடிப்பில் கலந்துகொள்ளமாட்டார் என்றும் கூறப்படுகின்றது. மேலும் ரிஸ்க் நிறைந்த காட்சியில் ரஜினி தற்போதெல்லாம் நடிப்பது கிடையாது என்றும் கூறப்படுகின்றது.
எனினும் இதன் காரணமாக இயக்குநர் நெல்சன் சில காட்சிகளை எடுக்க சிரமப்பட்டு வருகிறாராம். இவ்வாறுஇருக்கையில் இதே போல தான் அண்ணாத்த படத்திற்கும் ரஜினியின் தரப்பில் இருந்து பல கண்டிஷன்கள் வந்ததாக சில வதந்திகள் பரவின. இதையடுத்து இந்த தகவல்கள் எல்லாம் உண்மையா இல்லை வெறும் வதந்திதானா என்பது தெரியவில்லை.
Listen News!