சூப்பர் ஸ்டார் ரஜினி தற்போது ஜெயிலர், லால் சலாம் படங்களில் பிஸியாக நடித்து வருகிறார்.இதனையடுத்து தசெ ஞானவேல் இயக்கும் தலைவர் 170 படத்தில் நடிக்கவுள்ளார்.
இந்தப் படத்தில் சூர்யாவை ஒரு கேமியோ ரோலில் நடிக்க வைக்க இயக்குநர் தசெ ஞானவேல் திட்டமிட்டதாக தெரிகிறது.ஆனால், இதற்கு சூப்பர் ஸ்டார் ரஜினி கொடுத்துள்ள பதில் தலைவர் 170 படக்குழுவினருக்கு ஷாக்கிங்காக அமைந்துள்ளது.
ரஜினி நடித்து வரும் ஜெயிலர் படத்தின் ஷூட்டிங் இறுதிக்கட்டத்தை நெருங்கிவிட்டதாம். நெல்சன் இயக்கும் இந்தப் படம் தீபாவளிக்கு முன்பே வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனைத் தொடர்ந்து தனது மகள் ஐஸ்வர்யா இயக்கும் லால் சலாம் படத்தில் கேமியோ ரோலில் நடிக்கவுள்ளார் ரஜினி.
ஜெயிலர், லால் சலாம் ஷூட்டிங் முடிந்ததும் தலைவர் 170 படத்தில் நடிக்கவுள்ளார் ரஜினி. தசெ ஞானவேல் இயக்கும் இந்தப் படத்தை லைகா புரொடக்ஷன் தயாரிக்கிறது. தலைவர் 170-இல் ரஜினி ரிட்டையர்டு போலீஸ் ஆபிஸர் கேரக்டரில் நடிப்பதாகவும், தூக்குத் தண்டனைக்கு எதிரான பின்னணியில் இந்தப் படம் உருவாகவுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில், தலைவர் 170 படத்தில் சூர்யா நடிக்கவுள்ளதாக ஒரு தகவல் வேகமாக பரவியது. ஞானவேல் இயக்கிய ஜெய் பீம் படத்தில் சூர்யா கெஸ்ட் ரோலில் நடித்திருந்தார். அதேபோல், கமல் - லோகேஷ் கூட்டணியில் உருவான விக்ரம் படத்தில் ரோலக்ஸ் என்ற டெரர் வில்லனாக நடித்திருந்தார். இந்த இரண்டு கேரக்டர்களும் சூர்யாவுக்கு நல்ல ரீச் ஆனது.
இதனால், தலைவர் 170 படத்திலும் சூர்யாவை ஒரு கேமியோ ரோலில் நடிக்க வைக்க ஞானவேல் திட்டமிட்டிருந்தாராம். ஆனால், ரஜினி அதற்கு நோ சொல்லிவிட்டதாக தெரிகிறது. தனது படங்களில் தான் மட்டுமே லீடிங் ரோலில் நடிக்க வேண்டும் என்பதில் ரஜினி எப்போதும் கவனமாக இருப்பார். அதனால் தான் இன்றுவரை ஹீரோவாக மட்டுமே நடித்து வருகிறார் ரஜினி என்பது குய்ப்ப்பிடத்தக்கது.
Listen News!