• Sep 20 2024

ஒழுங்காக நடிக்காமல் பிரபல இயக்குநரிடம் திட்டு வாங்கிய ரஜினி- அடியும் வாங்கி இருக்கின்றாரா?

stella / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் தமக்கென்று ஓர் இடத்தைப் பிடித்து முன்னணி நடிகர்கள் பலர் இருக்கின்றனர். இவர்கள் சினிமாவில் அறிமுகமாகிய ஆரம்ப காலங்களில் சந்தித்த அவமானங்கள் அதிகம் எனலாம். இவர்களில் மிகவும் முக்கியமானவர் தான் ரஜினிகாந்த்.

அந்த வகையில் இவர் குறித்து தற்பொழுது ஓர் தகவல் வெளியாகியுள்ளது. அதாவது ரஜினி அபூர்வ ராகங்கள் என்னும் திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகினார். இவரை அறிமுகப்படுத்தியது இயக்குநர் பாலச்சந்தர் தான் . இப்படத்தைத் தொடர்ந்து ஒரு கன்னடப் படத்தில் சிறிய வேடத்தில் நடித்த ரஜினிக்கு அடுத்த வாய்ப்பை கொடுத்ததும் பாலச்சந்தர்தான்.

அவள் ஒரு தொடர்கதை திரைப்படத்தை தெலுங்கில் ரீமேக் செய்தபோது அதில் ஜெய் கணேஷ் நடித்திருந்த கதாப்பாத்திரத்தில் ரஜினியை நடிக்க வைத்திருப்பார். அதனை தொடர்ந்து மீண்டும் தமிழில் தான் இயக்கிய மூன்று முடிச்சி திரைப்படத்தில் ரஜினிக்கு முக்கிய கதாப்பாத்திரம் கொடுத்திருப்பார்.

மூன்று முடிச்சு திரைப்படத்தில் பாலச்சந்தர் ஒப்பந்தம் ஆனபோது, ஆண்ட்டி ஹீரோ கதாப்பாத்திரத்தில் நடிகர் கமலை நடிக்க வைக்கத்தான் தயாரிப்பாளர்கள் அறிவுறித்தியுள்ளனர். ஆனால் அதில் ரஜினியை நடிக்க வைக்கத்தான் பாலச்சந்தர் முடிவு செய்திருந்தாராம்.

அதனை அறிந்த தயாரிப்பாளர்கள்,"யார் அந்த ரஜினி, அவன் முடியென்ன, முகமென்ன, அவன் பேசும் தமிழென்ன" என்று விமர்சனம் செய்துள்ளனர். ஆனால் பாலச்சந்தரோ ரஜினிதான் நடிக்க வேண்டும். என் மீது நம்பிக்கை வையுங்கள். ஒரு வேளை தப்பாகிவிட்டால், நான் சினிமா துறையை விட்டே போய் விடுகிறேன் என்று அடம்பிடித்து ரஜினியை நடிக்க வைத்துள்ளார்.

கமலை கெஸ்ட் ரோலில் நடிக்க வைத்து, ரஜினியை மெய்ன் கதாப்பாத்திரத்தில் நடிக்க வைத்தார். அப்போது ரஜினி சில காட்சிகளில் சரியாக நடிக்கவில்லை என்றால், வெளியே சொல்ல முடியாத அளவிற்கு பாலச்சந்தர் திட்டுவாராம். திட்டுகளையும் மீறி சில சமயம் அவரிடம் அடியும் வாங்கியிருக்கிறேன் என்று ஒரு மேடை நிகழ்ச்சியில் ரஜினி கூறியிருக்கிறார். அன்று அவர் வாங்கிய திட்டுக்களும் அடிகளும்தான் இன்று அவரை சூப்பர் ஸ்டார் வரை உயர்த்தி இருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்

Advertisement

Advertisement