தமிழ் சினிமா பெருமையாக கொண்டாடும் நடிகர்களில் ஒருவர் ரஜினிகாந்த். இவரது நடிப்பில் இறுதியாக அண்ணாத்த திரைப்படம் வெளியாகியிருந்தது. இதனை இயக்குநர் சிறுத்தை சிவா இயக்கியிருந்ததோடு இப்படம் வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும் வசூலில் குவித்திருந்தது.
இதனை அடுத்து ரஜினி இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ஜெயிலர் என்னும் படத்தில் நடித்து வருகின்றார். இப்படத்தின் படப்பிடிப்புக்கள் நடைபெற்று வருகின்றது. படப்பிற்பிற்காக ரஜினி டெல்லிக்கு சென்ற வீடியோ எல்லாம் வெளியாகி வைரலானது. இதனால் அவரது ரசிகர்கள் பாராட்டியும் வருகின்றனர்.
இந்த நிலையில் இன்றைய தினம் ரஜினி தமிழக ஆளுநரை சந்தித்தார்.திடீரென ஆளுநரை சந்தித்தது ஏன் என ரசிகர்கள் வினாவி வந்தனர். இது குறித்து ரஜினி கூறியதாவது
மரியாதையின் நிமித்தம் தமிழக ஆளுநரை சந்தித்தேன். ஆளுநருடன் அரசியல் பற்றி விவாதித்தேன். ஆனால் அதை பற்றி இப்போதைக்கு எதுவும் சொல்ல முடியாது என்று கூறினார்.
மேலும் அரசியலுக்கு வருவீர்களா என்று கேட்ட போது அரசியலுக்கு வரும் எண்ணம் எனக்கில்லை என்று வெளிப்படையாகக் கூறியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
பிற செய்திகள்
- தனது காதலியை ப்ரேக் அப் செய்த பாக்கியலட்சுமி சீரியல் எழில்- அட இவர் ராஜா ராணி சீரியல் ஹுரோயின் தானே
- என்ன மேடம் வர வர அடையாளமே தெரியாத அளவுக்கு மாறீட்டீங்களே- அன்ட் வயிட் கலரில் வித்தியாசமான கெட்டப்பில் ரம்யா பாண்டியன்
- மீண்டும் அஜித்துடன் நிற்கும் விஜய்- யாரும் பார்த்திடாத அரிதான போட்டோ- அடடே நடிகர் சிவாவும் நிற்கின்றாரே
- ‘அஜித்தைப் பார்த்தால் இந்த கேள்வி தான் கேட்பேன் விஜய் என்னோட தம்பி’- புதிய தகவலைக் கூறி சர்ப்ரைஸ் தந்த நடிகர் அமீர்கான்
சமூக ஊடகங்களில்:
- Facebook : சினிசமூகம் முகநூல்
- Twitter: சினிசமூகம் ட்விட்டர்
- Instagram : சினிசமூகம் இன்ஸ்டாகிராம்
- YouTube : சினிசமூகம் யு டியூப்
Listen News!