இலங்கை தூதர் ஆகிய வெங்கடேஷ்வரன் நேற்றைய தினம் நடிகர் ரஜினிகாந்தை அவரது இல்லத்தில் நேரில் சந்தித்து பேச்சு வார்த்தை நடத்தியுள்ளார். இலங்கையின் சுற்றுலாத்துறையை மேம்படுத்தும் நோக்கிலே இந்த சந்திப்பு இடம்பெற்றதாக கூறப்படுகின்றது.
அதாவது ரஜினிகாந்த் இலங்கைக்கு வருகை தந்து அங்குள்ள ராமாயண இதிகாசத்தில் தொடர்புடைய பாரம்பரிய கலாச்சார மத சின்னங்களை பார்வையிட வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாது இவரின் வருகை ஆன்மீக, ஆரோக்கிய சுற்றுலாவை மேம்படுத்தும் எனவும் கூறப்படுகின்றது.
இலங்கைத் தூதரின் வேண்டுகோளை அடுத்து ரஜினிகாந்த் விரைவில் திரைப்படங்களை முடித்துவிட்டு கண்டிப்பாக இலங்கை வருவதாக உறுதி அளித்துள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளன. இந்நிலையில் ரஜினிகாந்தின் வருகையை எதிர்பார்த்து அரசியல் வாதிகள் மட்டுமன்றி ரசிகர்கள் பலரும் காத்திருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
Listen News!