நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் தற்போது ஜெயிலர் திரைப்படம் தயாராகி வருகிறது. இதையடுத்து ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கும் லால் சலாம் படத்திலும் கேமியோ ரோலில் நடிக்க கமிட் ஆகி இருக்கிறார் ரஜினிகாந்த்.
இப்படத்தின் ஷூட்டிங் அடுத்த வாரம் தொடங்க உள்ளது. இப்படத்தை தயாரிக்கும் லைகா நிறுவனத்தின் தயாரிப்பில் மேலும் ஒரு படத்தில் நடிக்க கமிட் ஆகி உள்ளார் ரஜினிகாந்த்.
அதன்படி தற்காலிகமாக தலைவர் 170 என பெயரிடப்பட்டுள்ள அப்படத்தை ஜெய் பீம் படத்தின் இயக்குநர் த.செ.ஞானவேல் இயக்க உள்ளதாக அறிவித்துள்ளனர், இப்படத்திற்கு அனிருத் இசையமைக்க உள்ளதாகவும் லைகா நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் குறிப்பிடப்பட்டு உள்ளது.
இப்படியான நிலையில் பிரபல மலையாள நடிகரான அல்போன்ஸ் புத்திரன் ரஜினிகாந்த் குறித்து ஒரு தகவலைக் கூறியிருக்கின்றார். அதாவது நான் கேட்டதிலேயே ரஜினிகாந்த் பேச்சுத் தான் சிறந்தது. என்னைப் பொறுத்த வரை ஓஷோவை விட தனித்துவமான மதிப்புமிக்கவர் ரஜினிகாந்த் எனத் தெரிவித்துள்ளார். இவரின் கருத்து வைரலாகி வருவதையும் காணலாம்.
Listen News!