தமிழ் சினிமாவில் முன்னணி இசையமைப்பாளராக வலம் வருபவர் தான் இளையராஜா. இவர் அன்னக்கிளி என்ற திரைப்படத்துக்கு இசை அமைத்ததன் மூலம் 1976 இல் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானார் . இவர் தமிழ் தெலுங்கு மலையாளம் கன்னடம் போன்ற 1000க்கும் மேற்படட திரைப்படங்களுக்கு இசை அமைத்துள்ளார் .
இவரின் பிறந்தநாள் வருகின்ற ஜூன் மாதம் 2ஆம் தேதி கொண்டாடப்படவுள்ளது . இதனை முன்னிட்டு கோவையில் அவருடைய இசை கச்சேரிகள் நடைபெற்று வருகின்றது. இளையராஜா நடிகர் ரஜினிகாந்தை நேற்று அவரது வீட்டிற்க்கு சென்று சந்தித்துள்ளார் .அப்போது கோவை இசை நிகழ்ச்சிக்கு வருமாறு நடிகர் ரஜினிகாந்தை இளையராஜா அழைத்ததாக கூறப்படுகின்றது.
இளையராஜா ரஜனியின் வீட்டிற்கு சென்று அவருடன் சேர்ந்து எடுத்துள்ள புகைபடங்களை வெளியிட்டுள்ளார் . அது பெரும் வைரல் ஆகி வருகின்றது .இதனை அடுத்து ரஜினியின் வீட்டில் இருந்து புறப்பட்ட இளையராஜாவிடம் சாமி ஏதாவது வேலை இருக்கா என கேட்டார் ரஜினிகாந்த்.
அதற்கு அவர் கான்செர்ட்டுக்கான ரிஹர்சல் இருப்பதாகவும் அதற்காக ஸ்டுடியோ செல்வதாக கூறியுள்ளார்.இதனை கேட்ட ரஜனிகாந்த் தானும் வந்து பார்க்கலாமா என்று கேட்டார்.தாராளமா வா என்று இளையராஜா கூறி தனது காரில் அவரை ஸ்டுடியோக்கு அழைத்து சென்றுள்ளார் .
மெய் மறந்து இளையராஜாவின் ரிகர்சலை ரசித்த ரஜினிகாந்த் அவரிடம் இருந்து விடைபெற்று வீடு திரும்பியுள்ளார்.ரஜனிகாந்த இளையராஜா மேல் அதிக மரியாதையும் மதிப்பும் வைத்துள்ளார் இறைவனின் தூதுவர் என .இளையராஜாவை பலமுறை ரஜினிகாந்த் புகழ்ந்துள்ளாராம் என்று சுட்டிக் காட்டியுள்ளார். கோவையில் நடக்க உள்ள இசைய நிகழ்ச்சியில் நிச்சயமாக ரஜனிகாந்த் கலந்து கொள்ளுவார் என்று எதிர் பார்க்கப்படுகின்றது .
Listen News!