தமிழில் முக்கிய இயக்குநராக நெல்சன் தயாரிப்பில் இறுதியாக வெளியாகிய திரைப்படம் பீஸ்ட். இத் திரைப்படத்தில் தளபதி விஜய் நடித்திருந்தாலும் விமர்சன ரீதியாகவும் கலவையான விமர்சனங்களைப் பெற்றது.
இதனைத் தொடர்ந்து சூப்பர் ஸ்டார் ரஜினியை வைத்து புதிய படத்தை இயக்குவதாக கூறப்படுகின்றது. இந்தப்படத்திற்கு தற்பொழுது தலைவர் 169 என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது.
மேலும் ஏற்கனவே அப்படத்தின் அறிவிப்பு வீடியோ வெளியாகி பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. இருப்பினும் பீஸ்ட் படம் சொதப்பியதால் ரசிகர்கள் தற்பொழுதும் விமர்சித்து வருகின்றனர்.
இந்நிலையில் தற்போது ரஜினி ரசிகர்களை கவரும் வகையில் ஒரு தகவல் வெளியாகியுள்ளது. அதாவது தலைவர் 169 படத்தில் ரஜினியின் பிளாக் பஸ்டர் இயக்குநர் இணையவுள்ளாராம்.
நெல்சன் இயக்கத்தில் உருவாகவுள்ள தலைவர் 169 படத்தில் இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார் திரைக்கதையில் இணைந்து பணிபுரியவுள்ளதாக தகவல் வெளியாகியிருகிறது.
இந்த தகவல் எந்தளவிற்கு உண்மையென தெரியவில்லை இது குறித்த அதிகாரப்பூர்வான தகவல் விரைவில் வெளியாகும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
பிற செய்திகள்
சமூக ஊடகங்களில்:
- Facebook : சினிசமூகம் முகநூல்
- Twitter: சினிசமூகம் ட்விட்டர்
- Instagram : சினிசமூகம் இன்ஸ்டாகிராம்
- YouTube : சினிசமூகம் யு டியூப்
Listen News!