• Sep 21 2024

லிங்கா படுதோல்விக்கு ரஜினி எடுத்த முடிவு தான் காரணம் - வெளிப்படையாகக் கூறிய கே.எஸ் ரவிக்குமார்

stella / 2 years ago

Advertisement

Listen News!

புரியாத புதிர் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் கே எஸ் ரவிக்குமார். இதனைத் தொடர்ந்து பல வெற்றிப்படங்களை இயக்கிய இவர் கமல்ஹாசன், ரஜினிகாந்த், சரத்குமார், அஜித், போன்ற பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து பணியாற்றியுள்ளார்.

இந்நிலையில் தனது இயக்கத்தில் வெளியான ‘லிங்கா’ படம் குறித்து கே.எஸ். ரவிக்குமார் அளித்துள்ள பேட்டி இணையத்தில் வைரலாகி வருகிறது. ஆனால் ரஜினி நடிப்பில் இவர் இயக்கிய ‘லிங்கா’ படம் எதிர்பார்த்த வெற்றியினை பெறவில்லை. கடந்த 2014 ஆம் ஆண்டு வெளியான ‘லிங்கா’ படத்தில் அனுஷ்கா ரெட்டி, சோனாக்ஷி சின்கா, சந்தானம், ஜெகபதி பாபு ஆகியோர் நடித்திருந்தனர்.

கே.எஸ். ரவிக்குமார் இயக்கத்தில் 100 கோடி ரூபாய் பட்ஜெட்டில் ராக்லைன் என்டர்டைன்மென்ட் தயாரிப்பில் வெளியான இந்தப்படம் எதிர்பார்த்த வெற்றியினை பெறவில்லை. குறிப்பாக இந்தப்படத்தின் கிளைமேக்ஸ் காட்சி கடும் விமர்சனத்துக்குள்ளானது.

‘லிங்கா’ படத்திற்கு முதலில் வேறு ஒரு கிளைமாக்ஸை தான் ரவிக்குமார் எழுதி வைத்திருந்தாராம். ஹைதராபாத்தில் ஷூட்டிங் நடந்து கொண்டிருந்த நேரத்தில் எடிட் ஆன சீன்களை ரஜினி பார்த்து இருக்கிறார். அதன் பின் கிளைமாக்ஸை மாற்ற சொல்லி இருக்கிறார்.பலூன் சீன் எல்லாம் முன்பு இல்லையாம், ஆனால் ரஜினி சொன்னபின் பிடிக்கவில்லை என்றாலும் வேறு வழி இல்லாமல் அதை எடுத்ததாக கே.எஸ்.ரவிக்குமார் தற்போது ஒரு பேட்டியில் ஓபனாக கூறி இருக்கிறார். இதனால் லிங்கா படுதோல்விக்கு ரஜினி எடுத்த முடிவு தான் காரணம் என இணையத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement