தமிழ் சினிமாவில் வில்லனாக நடித்து ஹீரோ அவதாரம் எடுத்த நடிகர் தான் ரஜினிகாந்த். இவர் நடிப்பில் இறுதியாக அண்ணாத்த என்னும் திரைப்படம் வெளியாகியிருந்தது. குடும்ப சென்டிமென்டை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இப்படத்தில் ஏராளமான நட்சத்திரங்கள் நடித்திருந்ததோடு வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது.
இதனை அடுத்து இயக்குநர் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் ஜெயிலர் என்னும் படத்தில் நடித்து வருகின்றார். இப்படத்தின் படப்பிடிப்பும் மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது.
நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் - லதா தம்பதியரின் மகளும், ஐஸ்வர்யா ரஜினிகாந்தின் சகோதரியுமானவர் இயக்குநர் சௌந்தர்யா.இவர் நடிகர் ரஜினிகாந்தை வைத்து கோச்சடையான் என்னும் 3 டி அனிமேஷன் திரைப்படத்தையும், நடிகர் தனுஷ் நடிப்பில் வேலையில்லா பட்டதாரி-2 படத்தையும் இயக்கி இருந்தார்.
சௌந்தர்யாவுக்கு கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 2வது குழந்தை பிறந்தது. அந்த குழந்தைக்கு வீர் ரஜினிகாந்த் வணங்காமுடி என்று பெயர் சூட்டினார்.இந்நிலையில் இயக்குநர் சௌந்தர்யா ரஜினிகாந்த் கணவர் விஷாகன் & வேத் (முதல் குழந்தை) உடன் திருச்செந்தூர் முருகன் கோயிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்துள்ளார்.
கடலும் நள தீர்த்தத்திலும் நீராடி பின் சுப்பிரமணிய சுவாமியை தரிசனம் செய்தார்.சண்முகர், சூரசம்ஹாரமூர்த்தி, தட்சிணாமூர்த்தி உள்ளிட்ட சன்னதிகளுக்கு குடும்பத்துடன் சென்று வழிபட்டார். கோவில் யானை தெய்வானைக்கு கரும்பு வழங்கினார்.பொன்னியின் செல்வன் நாவலை வெப் சீரிஸாக எடுக்கும் பணிகளில் சௌந்தர்யா ரஜினிகாந்த் ஈடுபட்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
Listen News!