பிரபல தென்னிந்திய நடிகர் சரத்பாபு நேற்றைய தினம் அதாவது மே மாதம் 22ஆம் தேதி ஹைதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் பல்வேறு உடல் உறுப்புகள் செயலிழந்த காரணத்தால் காலமானார். இவரின் மறைவினை அடுத்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் "இன்று என்னுடைய நெருங்கிய நண்பர், அருமையான மனிதர் சரத்பாபுவை நான் இழந்திருக்கிறேன். இது ஈடுகட்ட முடியாத இழப்பு. அவருடைய ஆத்மா சாந்தியடையட்டும்" எனக் கூறி இரங்கல் பதிவினை நேற்றைய தினம் வெளியிட்டிருந்தார்.
அந்தவகையில் ரஜினிகாந்த் மற்றும் சரத் பாபு இணைந்து பல படங்களில் இணைந்து நண்பர்களாக பணியாற்றியுள்ளனர். அவற்றில் பெரும்பாலான படங்கள் வெற்றி அடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. அதாவது 'முள்ளும் மலரும், முத்து, அண்ணாமலை, பாபா' எனப் பல படங்களை குறிப்பிடலாம்.
இந்நிலையில் சரத்பாபுவின் உடல் தற்போது சென்னை தி.நகரில் உள்ள அவரது வீட்டில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து இவரின் உடலிற்கு அஞ்சலி செலுத்துவதற்காக நடிகர் ரஜினிகாந்த், மற்றும் கமல்ஹாசன் நேரில் வருவார்கள் எனப் பலராலும் எதிர்பார்க்கப்படுகின்றது. அதுமட்டுமல்லாது ரசிகர்களும் ரஜினி நேரில் வர வேண்டும் என்ற எதிர்பார்ப்பில் தான் உள்ளனர். நண்பனின் இறுதிச் சடங்கில் ரஜினி கலந்து கொள்வாரா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
Listen News!