• Sep 20 2024

ரஜினியின் லேட்டஸ்ட் புகைப்படம்..அடடே அவருடன் யார் நிக்கிறாங்க தெரியுமா..?

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

ரஜினி தற்போது ஜெயிலர் படத்தில் நடித்து வருகின்றார். கடந்த சில ஆண்டுகளாக ரஜினியின் படங்கள் எதிர்பார்த்த வெற்றியை பெறாததால் ஏகப்பட்ட விமர்சனங்கள் எழுந்தன. எனவே அதையெல்லாம் ஜெயிலர் படத்தின் மூலம் சரிக்கட்ட ரஜினி தீவிரம் காட்டி வருகின்றார் என்று தான் கூற வேண்டும்.

இளம் இயக்குநரான நெல்சனின் இயக்கத்தில் அனிருத்தின் இசையில் உருவாகும் ஜெயிலர் படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. எப்படி ரஜினிக்கு இது முக்கியமான படமோ அதே போல இயக்குநர் நெல்சனுக்கும் இது மிகமுக்கியமான படமாக அமைந்துள்ளது.

ஏனென்றால் நெல்சனின் கடைசி படமான விஜய்யின் பீஸ்ட் திரைப்படம் எதிர்பார்த்த வெற்றியை  பெறவில்லை.அது ரசிகர்களிடத்தே பெரும் அப்செட்டாக இருந்தது. எனவே அவரும் ஒரு வெற்றியை நோக்கி தான் இப்படத்தில் வேலை செய்து வருகின்றார். எனவே இருவரும் ஜெயிலர் படத்தில் ஒவ்வொரு விஷயத்தையும் பார்த்து பார்த்து செய்து வருகின்றனர்.

அத்தோடு கதை விவாதம், நடிகர்கள் தேர்வு என அனைத்திலும் கூடுதல் கவனம் செலுத்தி தற்போது ஒருவழியாக படப்பிடிப்பை ஆரம்பித்துள்ளனர். இந்நிலையில் தற்போது சென்னையில் இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது.

 இப்படத்தில் ரஜினியுடன் ரம்யா கிருஷ்ணன், யோகி பாபு, விநாயகன், வசந்த் ரவி ஆகியோர் நடிப்பது உறுதியாகியுள்ளது. இந்நிலையில் சமீபத்தில் ஜெயிலர் படப்பிடிப்பு தளத்தில் இருந்து ரஜினியின் புகைப்படம் வெளியாகியுள்ளது.


இவ்வாறுஇருக்கையில் ரஜினி ஒரு பெண் குழந்தைக்கு ஆட்டோகிராப் செய்து அவருடன் புகைப்படம் எடுத்துக்கொண்டது தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது. தற்போது சோஷியல் மீடியாக்களில் அப்புகைப்படம் செம வைரலாக போய்க்கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement