• Sep 20 2024

புதிய வாய்ப்புகள் கிடைக்காததால் கணவனைப் பிரிந்த ரக்ஷிதா- சூப்பர் பதிலடி கொடுத்த தினேஷ்

stella / 2 years ago

Advertisement

Listen News!


விஜய் டிவியில் ஒளிபரப்பாகிய சரவணன் மீனாட்சி என்னும் சீரியல் மூலம் பிரபல்யமானவர் தான் ரக்ஷிதா. இந்த சீரியல் மூலம் சிறந்த நடிகை என அடையாளம் காணப்பட்டதோடு தொடர்ந்த பல சீரியல்களில் நடித்திருக்கின்றார்.

தொடர்ந்து நாம் இருவர் நமக்கு இருவர் என்ற தொடரிலும் நடித்து வந்த இவர் தனது கேரக்டருக்கு அதிக முக்கியத்துவம் இல்லை என்று கூறி சீரியலில் இருந்து விலகி விட்டார்.இதனை அடுத்து கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் சொல்ல மறந்த கதை என்னும் சீரியலில் நடித்து வருகின்றார்.


இவர் நடிகர் தினேஷ் என்பவரை திருமணம்  செய்த நிலையில், இவர்கள் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு தற்போது பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்.இவர்கள் இருவருக்கும் திருமணமாகி 9 ஆண்டுகளை கடந்த நிலையில், குழந்தை இல்லாத காரணத்தால்தான் இருவரும் பிரிந்ததாகவும் தகவல்கள் வெளியாகின. 

ஆனால் இதை தினேஷ் மறுத்தார். காலம் ஒருநாள் அனைத்தையும் மாற்றும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்திருந்தார்.இதனிடையே, தினேஷிற்கு சீரியலில் நடிக்க வாய்ப்புகள் கிடைக்காததே இவர்களது பிரிவிற்கு காரணம் என்றும் கூறப்பட்டது. இந்நிலையில் தினேஷிற்கு சன் டிவியில் புதிய சீரியலில் நடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது.

சீரியலில் நடிக்காமல் இருந்த தினேஷ் -ரக்ஷிதா இடையில் அதுவே மிகப்பெரிய பிரச்சினையை ஏற்படுத்தி அவர்களுடைய பிரிவுக்கும் காரணமாக அமைந்ததாக கூறப்படும் நிலையில், தற்போது பிரபல சீரியலில் அவர் கமிட்டாகியுள்ளது ரக்ஷிதாவிற்கு பதிலடி கொடுக்கும்வகையில் அமைந்துள்ளதாக ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.


Advertisement

Advertisement