ராஜமௌலி இயக்கத்தில் கடந்த ஆண்டு ரிலீசாகி பிளாக்பஸ்டர் ஹிட்டான திரைப்படம் ஆர் ஆர் ஆர். ராம்சரண் மற்றும் ஜூனியர் என்டிஆர் நாயகர்களாக நடித்திருந்த இப்படத்திற்கு கீரவாணி இசையமைத்திருந்தார்.
இதில் இடம்பெற்ற பாடல்கள் அனைத்தும் வேற லெவலில் ஹிட்டாகின. குறிப்பாக ஆர்.ஆர்.ஆர் படத்திற்காக கால பைரவா மற்றும் ராகுல் இணைந்து பாடிய நாட்டு நாட்டு என்கிற குத்து பாடல் பட்டி தொட்டி எங்கும் பட்டையை கிளப்பியது.
முதலில் கோல்டன் குளோப் விருதை வென்ற இப்பாடல் சமீபத்தில் நடந்த ஆஸ்கர் விருது விழாவிலும் சிறந்த ஒரிஜினல் பாடல் என்கிற பிரிவில் விருது வென்று அசத்தியது. இதன்மூலம் ஆஸ்கர் விருது வென்ற முதல் இந்திய பாடல் என்கிற பெருமையும் நாட்டு நாட்டு நாட்டு பாடல் பெற்றது.
இந்த நிலையில் ஆஸ்கார் விருது விழாவில் கலந்து கொண்ட நடிகர் ராம்சரண் தனது மனைவியுடன் நாடு திரும்பியுள்ளார். அவரை ஹைதராபாத் விமான நிலையத்தில் இருந்து ரசிகர்கள் வரவேற்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Listen News!