• Sep 20 2024

பாக்கியாவிடம் தலையில் சத்தியம் வாங்கிய ராமமூர்த்தி- ராதிகா எடுத்த திடீர் முடிவு-பேரதிர்ச்சியில் எழில்- Baakiyalakshmi Serial

stella / 10 months ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் சூப்பர் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் பாக்கியலட்சுமி. அந்த வகையில் இந்த சீரியலில் இன்றைய தினம் என்ன நடக்கவுள்ளது என்று பார்ப்போம்.

கோபியை வீட்டுக்கு கூட்டிட்டு வந்ததால் எழில் ஈஸ்வரியைத் திட்ட ஈஸ்வரி கோபி எங்கையும் போகமாட்டான் இங்க தான் இருப்பான் அவனை உள்ளே கூட்டிட்டு போங்க என்று செழியனிடமும் இனியாவிடமும் சொல்கின்றார். அப்போது கோபி தான் இந்த வீட்டில் இருக்க முடியாது நீங்க அங்க கேட்கும் போது என்னால திரும்ப பேச முடில அதான் உங்க கூட வந்தேன் என்கின்றார்.


அப்போது ஈஸ்வரி நீ இங்க இருந்து போனால் எனக்கு ஏதாவது ஆகிடும் பரவாயில்லையா  என்று கேட்க கோபி என்ன செய்வதென்று தெரியாமல் உள்ளே போகின்றார். தொடர்ந்து ஈஸ்வரியும் உள்ளே போகின்றார். இப்போது பாக்கியா தான் இந்த வீட்டை விட்டு போகப்போவதாக சொல்கின்றார். அதற்கு எழில் நீ ஏன்மா வீட்டை விட்டு போகனும் என்று கேட்கின்றார்.

மேலும் பாக்கியா இவரு வந்திட்டாரு, இவரு பின்னாலேயே ராதிகா வந்து நான் கூட்டிட்டு வந்த மாதிரியே பேசுவாங்க நான கிளம்புறேன் என்று போக ராமமூர்த்தி பாக்கியாவை தலையில் கை வைத்து சத்தியம் வாங்குகின்றார். நீ இந்த வீட்டை விட்டு போகக்கூடாது என்று,பாக்கியாவும் தலையில் அடித்து சத்தியம் பண்ணுகின்றார்.


தொடர்ந்து ராதிகா கோபி ஈஸ்வரியுடன் போனதை நினைத்து அழுகின்றார். அபபோது அவரின் அம்மா இவரை சும்மா விடக்கூடாது வா போலீஸ் ஸ்டேசன் போகலாம் என்று சொல்ல,ராதிகா எதுவும் வேணாம் நான் தனியாகவே இருக்கிறேன் என்று கோபத்தில் கத்தி விட்டு உள்ளே சென்று விடுகின்றார்.

பின்னர் ஜெனி செழியனுடன் இருந்து  பாக்கியா பேசிட்டு இருக்கும் போது மாலினி வருகின்றார்.குழந்தை அழுகின்றது என ஜெனி உள்ளே கிளம்பிச் சென்றதும் பாக்கியாவிடம் டீ கேட்டு பாக்கியாவையும் கிச்சனுக்கு அனுப்பி விட்டிட்டு செழியனுடன் மாலினி தனியாக இருந்து பேசிக் கொண்டிருக்கின்றார்.


அப்போது செல்வி இந்த பொண்ணு அடிக்கடி வீட்டு்கு வருவது சரியாபடல அக்கா என்று சொல்ல பாக்கியாவும் எனக்கும் இது தப்பா தான் தெரியுது என்கின்றார்.இத்துடன் இன்றைய எப்பிஷோட் முடிவடைகின்றது.



Advertisement

Advertisement