தென்னிந்திய சினிமாவில் கோடிக்கணக்கான ரசிகர்களின் மனங்களை வென்ற நட்சத்திர நாயகிகளில் ஒருவராக வலம் வருபவர் நடிகை ரம்பா. இவர் சுந்தர்.சி இயக்கத்தில் வெளிவந்த 'உள்ளத்தை அள்ளித்தா' என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானவர். அதனைத் தொடர்ந்து 'செங்கோட்டை, அருணாச்சலம், காதலா காதலா, மின்சார கண்ணா, அன்புடன், ஆனந்தம், மிலிட்டரி, 3 ரோஸஸ்' எனப் பல படங்களின் வாய்ப்புக்களும் இவருக்கு வந்து குவியத் தொடங்கின.
இவ்வாறாகப் பல படங்களிலும் நடித்து வெற்றி வாகை சூடி வந்த நடிகை ரம்பாவிற்கு இலங்கையை சேர்ந்த இந்திர குமார் பத்மநாதன் என்பவருடன் கடந்த 2010-ஆம் ஆண்டு கோலாகலமான முறையில் திருமணம் நடைபெற்றது. இந்த திருமணத்தைத் தொடர்ந்து இவர் படங்களில் நடிப்பதில்லை.
இவர்களின் சிறந்த குடும்ப வாழ்க்கைக்கு எடுத்துக்காட்டாக இந்த அழகிய தம்பதிக்கு ஒரு மகனும், இரண்டு மகள்களும் உள்ளனர். சினிமாவில் நடிப்பதிலிருந்து ஓய்வு பெற்றிருந்தாலும் ரம்பா சமூக வலைத்தளங்களில் எப்போதுமே ஆக்டிவாக இருந்து வருகின்ற ஒருவர். இவர் அடிக்கடி தனது குடும்பத்துடன் இருக்கும் அழகிய புகைப்படங்களை தனது சமூக வலைத்தளத்தில் பகிர்வு செய்து வருவார்.
இந்த நிலையில் இவர் தற்போதும் தனது மகளுடன் எடுத்துக்கொண்ட அழகிய செல்பி புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். இப்புகைப்படங்களானவை தற்போது இவரின் ரசிகர்களால் வைரலாக்கப்பட்டு வருகின்றது.
பிற செய்திகள்
- அச்சு அசல் த்ரிஷாவைப் போல் இருக்கும் பிக்பாஸ் பிரபலம்… வியப்பில் ஆழ்த்திய புகைப்படம்..!
- 6 வருடங்களாக லவ் டார்ச்சர் அனுபவித்து வரும் நித்யா மேனன்…அதுவும் 30 மொபைல் எண்களிலா..? வியப்பில் ஆழ்த்திய தகவல்..!
- பல கோடி ரூபாய் கொடுத்து கார்த்தியின் படத்தை கைப்பற்றிய நிறுவனம்…அடடே அதுவும் இந்தப் படத்தையா..?
- தந்தை முரளியின் பெயரை காப்பாற்றுவாரா அதர்வா..? ‘குருதி ஆட்டம்’ முதல் நாள் வசூல் இவ்வளவு தானா..?
- பிரபு தேவாக்கு ஜீ தமிழ் கொடுத்த சர்ப்பிரைஸ்…அடடே இதை அவர் கொஞ்சமும் எதிர்பார்த்திருக்க மாட்டாரே..!
சமூக ஊடகங்களில்:
- Facebook : சினிசமூகம் முகநூல்
- Twitter: சினிசமூகம் ட்விட்டர்
- Instagram : சினிசமூகம் இன்ஸ்டாகிராம்
- YouTube : சினிசமூகம் யு டியூப்
Listen News!