உள்ளத்தை அள்ளித்தா’ படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் தான் நடிகை ரம்பா. இதன்பின் ‘செங்கோட்டை, அருணாச்சலம், காதலா காதலா, மின்சார கண்ணா, ஆனந்தம் உள்ளிட்ட பல படங்களில் நடித்து தமிழ் ரசிகர்களின் மனங்களில் நீங்காத இடம் பிடித்தார்.
நடிகை ரம்பாவிற்கு கடந்த 2010ஆம் ஆண்டு இந்திர குமார் பத்மநாதன் என்பவரை திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆகி விட்டார். இவர்களுக்கு ஒரு மகனும், இரண்டு மகள்களும் உள்ளனர்.
சமூக வலைத்தளங்களில் ஆக்டீவாக இருக்கும் ரம்பா தன்னுடைய குடும்பப் புகைப்படங்களை சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு வருவதையும் வழக்கமாக வைத்துள்ளார். மேலும் இவர் எப்போது ரீ என்ட்ரி கொடுத்து நடிப்பார் என்பதே ரசிகர்கள் ஆர்வமாக உள்ளது.
இந்நிலையில் ரம்பாவின் கணவர் சமீப்த்தில் ஒரு ஷோ ரூம் ஒன்றை திறக்க, அதை திறந்து வைத்தது நடிகை தமன்னா தான்.அதிலும் தமன்னா அந்த திறப்பு விழாவில் ரம்பாவின் கணவர் அருகில் நெருக்கமாக அமர்ந்து சிரித்து பேசிய புகைப்படம் தான் தற்போது செம வைரலாகி வருகின்றது.
இதனால் இதைப் பார்த்த ரசிகர்கள் கண்டிப்பாக அந்த புகைப்படத்தை பார்த்த ரம்பாவின் காதுகளில் புகை வந்திருந்தாலும் ஆச்சரியமில்லை என கிண்டலடித்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Listen News!