தமிழ் சினிமாவில் பிரமாண்ட இயக்குநராக வலம் வருபவர் தான் ஷங்கர்.இவர் தெலுங்கு நடிகர் ராம் சரணை வைத்து யரிடப்படாத RC15 என அழைக்கப்படும் படத்தை இயக்கி வருகின்றார். இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள புனே நகரில் நடைபெற்றது.
அடுத்தக்கட்ட படப்பிடிப்பு ராஜமுந்திரி அருகே உள்ள தோசகாயலபள்ளி கிராமத்தில் நடந்தது. பின் மூன்றாம் கட்ட படப்பிடிப்பு பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் நடந்தது. நான்காம் கட்ட படப்பிடிப்பு மே மாதம் விசாகப்பட்டினத்தில் நடந்தது.
இந்நிலையில் ஷங்கர் இந்தியன் 2 படத்தின் படப்பிடிப்பை நேற்றைய தினம் ஆரம்பித்துள்ளார். இதனால் ராம்சரண் படத்தின் படப்பிடிப்பு குறித்த தகவலை ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருந்தனர். ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் இயக்குநர் ஷங்கர் தனது டுவிட்டர் பக்கத்தில் படத்தின் படப்பிடிப்பு குறித்த தகவல்களை அறிவித்துள்ளார்.
அதில், எல்லாருக்கும் வணக்கம், இந்தியன் 2 & #RC15 படங்களின் படப்பிடிப்பு ஒரே நேரத்தில் நடக்கும். #RC15 படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு செப்டம்பர் மாதம் முதல் வாரத்தில் இருந்து ஐத்ராபாத் & விசாகப்பட்டினத்தில் நடைபெறும்" என ஷங்கர் கூறியுள்ளார்.இதனால் ரசிகர்கள் குஷியில் உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Listen News!