காமெடி நடிகர் மயில்சாமி(57) சென்னையில் காலமனார். நேற்று இரவு சென்னை, கேளம்பாக்கத்தில் உள்ள சிவன் கோயிலில் சாமி தரிசனம் செய்துவிட்டு வீடு திரும்பியபோது மாரடைப்பு ஏற்பட்டுள்ளது.
ரஜினி, கமல் தொடங்கி இன்றைய இளம் நடிகர்கள் வரை ஏராளமான நட்சத்திரங்களுடன் நடித்துள்ளார்.ஏற்கனவே இதய அறுவை சிகிச்சை பெற்றுள்ள இவருக்கு கடந்த டிசம்பரில் மாரடைப்பு ஏற்பட்டு சிகிச்சை பெற்றுள்ளார். இந்நிலையில் இவரின் திடீர் மறைவு திரையுலகினர், ரசிகர்கள் இடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
மயில்சாமி மரணம் குறித்து இயக்குநர் மற்றும் நடிகரான ரமேஷ் கண்ணா பகிர்ந்து கொண்ட நினைவலைகள்
அவர் கூறியதாவது,''திரையுலகில் தொடர்ந்து துரதிஷ்டமாக மரணங்கள் ஏற்பட்டுக்கொண்டு இருக்கின்றன.மயில் சாமி இறப்பதற்கான வாய்ப்பு மிகவும் நம்ப முடியாத அதிர்ச்சியாக இருக்கிறது .இவர் .எப்பாவும் சுறுசுறுப்பாகவும், சிரித்த முகத்துடனும் இருப்பார். ,என்னை விட்டு அவர் எதுவும் செய்ய மாட்டார் .1985 இல் கன்னி ராசி படத்தில் இவர் நடித்த காமெடி சீன் முதல் காட்சியாக நடித்திருப்பாரு.இந்த படத்திலிருந்து ,நாங்கள் இருவரும் 28, 30 வருடங்கள் நெருங்கிய நண்பர்களாக இருக்கின்றோம்.
ஒரு சிறந்த மனிதர் எல்லோருக்குமே உதவி செய்வார் .திரைப்படத்தில் எந்த கேரக்டரும் இவருக்கு பக்காவா பொருந்தும்.அவரும் ,நானும் அந்தக்காலத்தில் அப்படி ஒரு நெருங்கின நண்பர்களாக பழகி இருந்தோம்'' .என கூறியிருந்தார்.
Listen News!