சின்னத்திரையில் கடந்த ஒருவாரமாக விறுவிறுப்புடன் ஒளிபரப்பாகி வரும் சீரியல் ஈரமான ரோஜாவே -2.அதாவது காவியா பார்த்தியனை விரும்புவதாக வந்து கூறி அந்த திருமணத்தை நிறுத்த முற்படும் போது தேவி அதை நிறுத்த விடாது பார்த்தியைகட்டாயப்படுத்தி திருமணத்தை நடத்த முற்படுகின்றார்.
அந்த நேரம் பார்த்தியின் தாய் வந்து எல்லா உண்மைகளையும் கூறி விடுகின்றார்.தன்னை இந்த திருமணம் நடப்பதற்காக தேவியும் ரம்யாவும் சேர்ந்து தலையில் அடித்து கொள்ளப்பார்த்தார்கள் என்று.இதனைக் கேட்டதும் பார்த்தியன் தந்தை அருணாச்சலம் ஷாக்கடைகின்றார்.
இவ்வாறு நடந்து கொண்டு இருக்கும் போது பார்த்தியை திருமணம் செய்து தருமாறு ரம்மியா கெஞ்சியும் கேட்காத குடும்பத்திற்கு உடனே ரம்யா குத்துவிளக்கால் என்னை குத்தி விடுவேன் என மிரட்டுகின்றார்.
அதனைத் தொடர்ந்து குத்து விளக்கால் குத்தி காயப்பட ....உடனே அவரை ஹாஸ்பிட்டலிற்கு கொண்டு செல்கின்றனர்.அதன் பின்னர் சீரியஸ் கண்டிசனில் இருக்கும் பொழுது... ரம்யாவின் தாய் தேவி பார்த்தியின் குடும்பத்தை மிரட்டுகின்றார்.
“உங்கலால் தான் இப்படி ஆனது.அதனால் தான் என் மகள் இப்படி இருக்கிறாள்..அவளுக்கு ஏதும் நடக்கனும் உங்களை ஒன்னுமில்லாமல் பண்ணிடுவேன்..” என மிரட்ட ரம்யாவிற்கு ஒன்றும் இல்லை டாக்டர் வந்து கூறுகின்றனர்.
அதன் பிறகு பார்த்தியை பார்க்கனும் எனக் கூற...ஜீவா அவரை திட்டுகின்றார்.இதன் பின் ரம்யாவை பார்க்க வந்த பார்த்தி..“ உன்னை எனக்கு ரொம்ப பிடிக்கும் ” என்று கூறி கையைப் பிடித்து ஆறுதல் கூறுகின்றார்.இதன் பின் நான் காவியாவை அதிகமாக நேசிக்கின்றேன் எனக் கூறி கையை விட ரம்யா ஷாக்கடைகின்றார்.இத்துடன் இன்றைய எபிசோட் முடிவடைகின்றது.
Listen News!