விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்று 'பிக்பாஸ்'. இந்த நிகழ்ச்சியில் பலர் கலந்து கொண்டாலும் ஒரு சிலர் மட்டும் நம் மனதைவிட்டு மறைய மாட்டார்கள். அப்படி ரசிகர்கள் மனதில் நீங்காத இடம் பிடித்தவர்களில் முக்கியமான ஒருவர் தான் ரம்யா பாண்டியன்.
பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் ரம்யா பாண்டியனுக்கு சினிமா வாய்ப்புகள் குவிந்த வண்ணம் உள்ளன. அந்தவகையில் தற்போது இவர் நடிப்பில் நண்பகல் நேரத்து மயக்கம் என்கிற படம் தயாராகி உள்ளது.
இப்படத்தில் மலையாள சூப்பர்ஸ்டார் மம்முட்டி நாயகனாக நடித்துள்ளார். இப்படத்தை லிஜோ ஜோஸ் இயக்கி உள்ளார். இப்படம் ரிலீசுக்கு முன்பே பல்வேறு விருது விழாக்களில் திரையிடப்பட்டு பாராட்டுக்களை பெற்று வருகிறது.
சினிமாவைத் தாண்டியும் சமூகவலைத்தளங்களில் ஆக்டிவாக இருந்து வருகின்ற ரம்யா பாண்டியன் அவ்வப்போது புகைப்படங்களின் வாயிலாக தனது கவர்ச்சியை ரசிகர்களுக்கு அள்ளி வீசி வருகின்றார்.
இந்நிலையில் தற்போதும் இவர் வெளியிட்ட புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் படு வைரலாகி வருகின்றன.
Listen News!