இந்திய சினிமாவில் மிரட்டலான வில்லன் கதாப்பாத்திரத்தை தேர்வு செய்து ரசிகர்களை தன்வசம் வைத்துள்ளார் ராணா டகுபட்டி.
இவர் பாகுபலி படத்தில் நடித்ததன் மூலம் தனக்கான அங்கீகாரத்தை பெற்றுக்கொண்டார்.இந்நிலையில் இவர் செய்த செயல் ரசிகர்களிடத்தே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
அதாவது தன்னுடைய இன்ஸ்டாகிராம் பதிவுகள் அனைத்தையும் திடீரென 'டெலிட்' செய்துள்ளார். அவரது இந்த செயல் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. 4.7 மில்லியன் பாலோயர்கள் ராணாவுக்கு உள்ளார்கள்.
தெலுங்கில் முக்கியமான கதாநாயகர்களில் ஒருவராக இருக்கிறார். அவர் நடித்து சமீபத்தில் வெளிவந்த 'விராட பர்வம்' படம் சுமாராகத்தான் ஓடியது. அப்படத்தின் பிரமோஷனுக்குப் பிறகு அவர் மீடியா பக்கம் வருவதில்லை.
இவ்வாறுஇருக்கையில் ராணா டகுபட்டி தன்னுடைய இரண்டாம் ஆண்டு திருமண நாளை மனைவி மிஹீகாவுடன் கொண்டாடியுள்ளார்.
தற்போது இந்த ஜோடி ஐரோப்பிய நாடுகளுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளது. நேற்று தங்களது திருமண நாளைக் கொண்டாடிய புகைப்படங்களை மட்டும் ராணாவின் மனைவி மிஹீகா பதிவிட்டுள்ளார். அதில் தனது கணவர் ராணாவையும் 'ராக்' செய்துள்ளார்.
அத்தோடு தனது இன்ஸ்டாவில் அனைத்துப் பதிவுகளையும் டெலிட் செய்துள்ள ராணா தனது திருமண நாள் கொண்டாட்டப் புகைப்படங்களைக் கூட அவரது கணக்கில் பதிவிடவில்லை. 'விராட பர்வம்' படத்திற்குப் பிறகு வேறு எந்தப் படத்திலும் நடிக்க ராணா இன்னும் சம்மதிக்கவில்லை.
Listen News!