• Sep 20 2024

பிக்பாஸ் வீட்டில் ரணகளம்; காயப்பட்டோருக்கு தனது பிஞ்சு கைகளால் மருந்து கட்டிவிட்ட ஜோவிகா!

Aathira / 11 months ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி தற்போது நாளுக்கு நாள் மேலும் சூடு பிடிக்கின்றது. அதிலும் சனி, ஞாயிறு கமல் தொகுத்து வழங்கும் காட்சியை  பார்ப்பதற்கென தனி ரசிகர் கூட்டமே காத்திருக்கும்.

தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என பிராந்திய மொழிகளிலும் பிக்பாஸ் நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது. இதில் கலந்து கொண்ட பிரபலங்களுக்கு பிரபலத்தோடு சினிமாவில் நடிப்பதற்கான வாய்ப்பும் கிடைப்பதால், சினிமாவில் நடிக்க விரும்பும் நடிகர்கள் இந்த நிகழ்ச்சியில் அதிக கவனம் செலுத்தி வருகின்றனர்.



இந்த நிலையில், 18 வது நாளாக தொடரும் பிக்பாஸ் நிகழ்ச்சியில்  இரு வீட்டினருக்கும்  ஓட்சிஜன் எமயன்சி டஸ்கிட்கான கேம் பற்றி விவரிக்கப்பட்டு, போட்டியாளர்களும் தம்மை ஆயத்தப்படுத்திக் கொண்டனர்.

குறித்த போட்டியின் படி எந்த வீட்டாளர்கள் அதிக சிலிண்டர்களை பாதுகார்க்கிறார்களோ அவர்களே வெற்றி பெறுவார்கள் என அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில், பிக்பாஸ் வீட்டில் ஆட்டத்தை ஆரம்பித்த போட்டியாளர்களால் எதிர்பாராத விதமாக திடீரென வீட்டிலுள்ள கண்ணாடியொன்று உடைக்கப்பட்டு அதன் அருகே நின்ற போட்டியாளர்கள் மீது விழுந்தது.

இதையடுத்து, பிக்பாஸ் வீட்டில் காயப்பட்ட  போட்டியாளர்களுக்கு வனிதாவின் மகள் ஜோவிகா விரைந்து மருந்து கட்டியுள்ளார். வயதில் சிறியவர் ஆனாலும் இவரது சேவையை  பிக் பாஸ் வீட்டில் மட்டும் அல்லது மக்களின் மனதையும் கவர்ந்துவிடுவார் ஜோவிகா.


Advertisement

Advertisement