• Sep 20 2024

குப்பை பொறுக்கிய நடிகர் ரன்வீர் சிங்.. கண்டிப்பாக இதனால தான் அதைப் பண்ணியிருப்பாரு.. கலாய்க்கும் நெட்டிசன்ஸ்.!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

இந்தி திரையுலகில் மக்கள் மனம் கவர்ந்த பிரபல நட்சத்திர ஜோடிகளாக வலம் வருபவர்கள் நடிகர் ரன்வீர் சிங் மற்றும் நடிகை தீபிகா படுகோனே. இவர்கள் இருவருக்கும் உலகம் பூராகவும் கோடிக்கணக்கான ரசிகர்கள் உண்டு.


இந்நிலையில் சமீபத்தில் திரை பிரபலங்களுக்கு சிகை அலங்காரம் செய்யும் பணியில் ஈடுபட்டு வரும் தர்ஷன் யேவலேக்கர் என்பவரின் முடி திருத்தும் கடை ஒன்றை ரன்வீர் சிங் திறந்து வைத்து உள்ளார். அதிலும் குறிப்பாக இந்த நிகழ்ச்சியில் மிகவும் உற்சாகமுடன் காணப்பட்ட ரன்வீர் சிங், தரையில் கிடந்த குப்பைகளை தானே குனிந்து எடுத்து அகற்றி உள்ளார்.


அதுமட்டுமல்லாது திரை பிரபலங்களை படம் பிடிக்கும் புகைப்பட கலைஞரான ரோகன் ஸ்ரேஸ்தா என்பவருடன் இணைந்து பிராங்க் விளையாட்டிலும் ஈடுபட்டார். இவ்வாறாக அந்த நிகழ்ச்சியை மகிழ்ச்சியாக கொண்டு செல்லும் நோக்கில் மட்டுமே ரன்வீர் காணப்பட்டார். 

இருப்பினும் அவர் கீழே குனிந்து குப்பை பொறுக்கும் புகைப்படம் ஒன்று சமூக ஊடகங்களில் வெளிவந்து வைரலானது. இதனை பார்த்த ஒரு சிலர், பொது நிகழ்ச்சியில் ஒரு விளம்பரம் தேடுவதற்காக ரன்வீர் இதுபோன்று செயல்படுகிறார் என பலவாறு குறிப்பிட்டனர். 


அதேநேரத்தில் மேலும் சிலர் ரன்வீரின் மனைவி தீபிகா படுகோனே அடிக்கடி தூய்மையை பற்றி பேசி வருவார். அந்த பாதிப்புத் தான் தற்போது ரன்வீருக்கும் தொற்றி கொண்டது என கிண்டல் செய்து உள்ளனர். அத்தோடு இந்த தருணத்தில் படம் பிடிக்க வேண்டும் என்பதற்காக அவர் வந்தது போன்று உள்ளது. அதிர்ஷ்டவசத்தில், அதற்கு சில காகித துண்டுகளும் அவருக்கு உதவி செய்து உள்ளன எனக் கூறி பலவாறு கலாய்த்து வருகின்றனர்.

Advertisement

Advertisement