• Sep 20 2024

ஐ.ஏ.எஸ் அதிகாரியாக வர விரும்பிய ராஷி கண்ணா.. அப்புறம் ஏன் இங்க வந்திங்க?

tech / 2 years ago

Advertisement

Listen News!

"இமைக்கா நொடிகள்" படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் நடிகை ராசி கண்ணா. தொடர்ந்து அடங்குமறு, அயோக்கியா, சங்கத்தமிழன் உள்ளிட்ட படங்களில் நடித்தார். இதில் இமைக்காநொடிகள், அடங்குமாறு ஆகிய படங்கள் இவருக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று கொடுத்து.

தொடர்ந்து அரண்மனை3 ,துக்ளக் தர்பார் போன்ற திரைப்படங்களில் நடித்து தற்போது தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக வலம்வருகின்றார். தற்போது தனுஷ் ஜோடியாக திருச்சிற்றம்பலம், கார்த்தியுடன் சர்தார் படங்களில் நடித்து முடித்துள்ளார்.

தெலுங்கில் முன்னணி கதாநாயகியாக உள்ளார். கதாநாயகிகள் பலர் வழக்கமாக டாக்டர் ஆக ஆசைப்பட்டேன் என்று சொல்வது உண்டு. ஆனால் ராசி கண்ணா ஐ.ஏ.எஸ் அதிகாரி ஆக வேண்டும் என்ற கனவு கண்டதாக தெரிவித்துள்ளார். இதுகுறித்து ராசிகன்னா அளித்துள்ள பேட்டியில் "நான் ஐ .ஏ .எஸ் அதிகாரி ஆக வேண்டும் என்று நினைத்தேன்.

ஆனால் எதிர்பாராமல் நடிகையாகி விட்டேன் கடவுள் எனது தலையெழுத்தை முடிவு செய்து சினிமாக்களில் கொண்டுவந்து நிறுத்திவிட்டார் எந்த ஒரு பின்னணியும் இல்லாமல் சினிமா துறைக்கு வந்து கதாநாயகியாக இவ்வளவு பேரும் புகழும் பெற்று இருப்பது கடவுளின் தயவினால் தான்.

ஒரு காலத்தில் நான் கண்ட ஐ .ஏ .எஸ் அதிகாரியை விட கதாநாயகியானது நல்லதுதான் என்று நினைக்கின்றேன், ஐ .ஏ .எஸ் ஆகி பொது மக்களுக்கு தொண்டு செய்யலாம் என நினைத்தேன். இப்போது கதாநாயகியான பிறகும்கூட பொதுமக்களுக்கு சேவை தான் செய்கின்றேன் என்று கூறியுள்ளார்.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement