தென்னிந்திய சினிமாவில் தமிழ் ,தெலுங்கு ஆகிய மொழிகளில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் தான் ராஷ்மிகா மந்தனா. கன்னட நடிகையான இவர் தமிழில் சுல்தான் என்னும் திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகியவர். அதனைத் தொடர்ந்து தற்பொழுது தளபதி 66 படத்தில் நடித்து வருகின்றார்.
இது தவிர ஹிந்தியில் சித்தார்த் மல்கோத்ரா நடிப்பில் உருவாகி வரும் மிஷன் மஜ்னு படம் மூலம் அறிமுகமாகவுள்ளார். அடுத்ததாக அமிதாப் பச்சன் உடன் இணைந்து குட்பை என்கிற பாலிவுட் படத்திலும், அதனை தொடர்ந்து ஆலியா பட்டின் கணவரும் பாலிவுட் நடிகருமான ரன்பீர் கபூர் உடன் இணைந்து அனிமல் என்கிற படத்திலும் அவருக்கு ஜோடியாக நடிக்கிறார்.
இது தவிர சமூக வலைத்தளங்களில் ஆக்டீவாக இருக்கும் இவர் ரசிகர்களின் நேஷ்னல் கிரஷ் என்ற பட்டத்தோடு வலம் வருகின்றார்.இந்த நிலையில் கடந்த திங்கட்கிழமை இரவு மும்பையில் வெள்ளை நிற லாங் ஷர்ட் மற்றும் பேண்ட் அணிந்து கொண்டு வந்த இவரை புகைப்படக் கலைஞர்கள் போட்டோ எடுத்தனர்.
அப்போது, அந்த போட்டோவில் தானும் பங்கு பெற வேண்டும் என இளம் ரசிகர் ஒருவர் உள்ளே நுழைய, ராஷ்மிகா மந்தனாவின் பாடிகார்டுகள் அவரை பிடித்து அப்புறப்படுத்த முயன்றனர்.
உடனடியாக தனது பாடிகார்டுகளை முறைத்த ராஷ்மிகா, நோ நோ அப்படி பண்ணாதீங்க என சொல்லி விட்டு, அந்த ரசிகருடன் சிரித்தபடியே போட்டோவும் எடுத்துக் கொண்டார். இவரின் இந்த செயலுக்கு ரசிகர்கள் லைக்குகளை குவித்து வருவதும் குறிப்பிடத்தக்கது.
பிற செய்திகள்
சமூக ஊடகங்களில்:
- Facebook : சினிசமூகம் முகநூல்
- Twitter: சினிசமூகம் ட்விட்டர்
- Instagram : சினிசமூகம் இன்ஸ்டாகிராம்
- YouTube : சினிசமூகம் யு டியூப்
Listen News!