தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் தனுஷ் சர்வதேச அளவில் பல ப்ராஜெக்ட்களில் இணைந்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார். தன்னுடைய அடுத்தடுத்த படங்களை மிகவும் சிறப்பாக தேர்ந்தெடுத்து தமிழ், தெலுங்கு, இந்தி மட்டுமில்லாமல் ஹாலிவுட் படங்களிலும் நடித்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.
தனுஷ். அடுத்தடுத்து தேர்ந்தெடுத்த இயக்குநர்களின் சிறப்பான கதைக்களத்தில் நடித்துவரும் தனுஷ், இயக்குநர்களின் சாய்சாக உள்ளார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு தனுஷின், வாத்தி படம் தமிழ் மற்றும் தெலுங்கில் நேரிடையாக வெளியாகி ரசிகர்களை அசத்தியது.
இந்நிலையில் அடுத்ததாக இவரது நடிப்பில் அருண் மாதேஸ்வரன் இயக்கியுள்ள கேப்டன் மில்லர் படம் வரும் டிசம்பர் மாதத்தில் ரிலீசாகவுள்ளது. இந்தப் படமும் பான் இந்தியா படமாக வெளியாகவுள்ளது. பீரியட் படமாக உருவாகியுள்ள இந்தப் படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் டீசர் சமீபத்தில் வெளியாகி மிரட்டியது. இந்தப் படத்தின் மீதான எதிர்பார்ப்பையும் எகிற செய்துள்ளது. இந்தப் படங்களை தொடர்ந்து அடுத்ததாக டி50 படத்தின் சூட்டிங்கில் தற்போது இணைந்துள்ளார் தனுஷ்.
இந்நிலையில் டி50 படத்தை தொடர்ந்து அடுத்ததாக பிரபல தெலுங்குப்பட இயக்குநர் சேகர் கம்முலா இயக்கத்தில் இணையவுள்ளார் தனுஷ். இந்தப் படத்தின் அறிவிப்பு சில மாதங்களுக்கு முன்பே வெளியான நிலையில், இந்த ஆண்டின் இறுதியில் படத்தின் சூட்டிங் துவங்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்நிலையில் இந்தப் படத்தில் தற்போது நாயகியாக ராஷ்மிகா மந்தனா இணையவுள்ளது குறித்து அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தன்னுடைய ட்விட்டர் பக்க்தில் விடியோ மூலம் தகவல் தெரிவித்து உற்சாகத்தையும் பதிவிட்டுள்ளார் ராஷ்மிகா மந்தனா. தற்போது புஷ்பா 2 உள்ளிட்ட படங்களில் நடித்துவரும் ராஷ்மிகா, பாலிவுட்டிலும் படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். இந்நிலையில் தனுஷ் -சேகர் கம்முலா காம்பினேஷனில் தமிழ், தெலுங்கு மொழிகளில் உருவாகவுள்ள டி51 படத்தில் அவர் நடிக்கவுள்ளது ரசிகர்களுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Listen News!