தெலுங்கில் வெளியான ‘கீதா கோவிந்தம்’ என்ற படத்தின் மூலம் இந்திய சினிமாவில் தனக்கென்று ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியவர் நடிகை ராஷ்மிகா மந்தனா.
அதுமட்டுமல்லாது நடிகர் கார்த்தியின் நடிப்பின் மூலம் வெளியாகி இருந்த ‘சுல்தான்’ படத்தின் மூலமாக தமிழ் சினிமாவிலும் கதாநாயகியாக அறிமுகமாகி விட்டார்.
தற்போது தளபதி விஜய்க்கு ஜோடியாக ‘வாரிசு’ படத்திலும் நடித்து வருகின்றார். அது மட்டுமின்றி ஹிந்தியில் Goodbye மற்றும் அனிமல் ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.
தற்போது மும்பையில் இருக்கும் அவர் தனது ஹிந்தி படங்களின் ஷூட்டிங் மற்றும் டப்பிங் பணிகளில் பிசியாக ஈடுபட்டு வருகின்றாராம்.
அது மட்டுமின்றி அவர் புஷ்பா 2 படத்திலும் விரைவில் நடிக்க தொடங்க இருக்கிறார்.
அத்தோடு ராஷ்மிகா இதற்குமுன்பு தான் நடித்த படங்களுக்கு ஒரு கோடி முதல் இரண்டு கோடி வரை சம்பளம் வாங்கி வந்தார். ஆனால் தற்போது தனக்கு ஹிந்தி பட வாய்ப்புகளும் அதிகமாக வருவதால் சம்பளத்தை அப்படியே உயர்த்தி இருக்கிறார்.
மேலும் ஒரு படத்திற்கு தற்போது 4 கோடி ருபாய் சம்பளமாக அவர் கேட்டுள்ளாராம். அடுத்து புஷ்பா படத்திற்கும் அதே தொகையை தான் சம்பளமாக ராஷ்மிகா பெற இருக்கிறார் என தெரிகிறது.
பிற செய்திகள்
- கர்ப்பகால போட்டோ சூட் நடத்திய தொகுப்பாளினி தியா; குவியும் லைக்ஸ்..!
- சீரியல் நடிகை ஸ்வேதாவிற்கு அடித்த ஜாக்பாட்…குவியும் வாழ்த்துக்கள்…!
- புதிதாகப் பெண் வாங்கிய விஜே விஷால்…அதுவும் ரெட் கலரிலேயா…? வாழ்த்துத் தெரிவிக்கும் ரசிகர்கள்..!
- அட நம்ம சத்யராஜ்ஜா இது..? சிறுவயதில் இப்படி இருந்திருக்காரே…வெளியான புகைப்படம்..!
- தனது மகளுடன் செல்பி எடுத்த ரம்பா… வைரலாகும் அழகிய புகைப்படங்கள்…!..!
சமூக ஊடகங்களில்:
- Facebook : சினிசமூகம் முகநூல்
- Twitter: சினிசமூகம் ட்விட்டர்
- Instagram : சினிசமூகம் இன்ஸ்டாகிராம்
- YouTube : சினிசமூகம் யு டியூப்
Listen News!