சன் டிவியில் ஒளிபரப்பாகும் அன்பே வா' சீரியலில் முரட்டு வில்லியாக நடித்து வரும் சின்னத்திரை சீரியல் நடிகை மகாலட்சுமி, கடந்த ஆண்டு இவர் தயாரிப்பாளர் ரவீந்தரைக் காதலித்து திருமணம் செய்து கொண்டார். இருவருக்குமே இது இரண்டாவது திருமணம் என்பதால், திருப்பதியில் மிகவும் எளிமையாக இவர்கள் திருணம் நடந்தது.
இவர்களின் திருமண புகைப்படம் வெளியான போது கூட, பலர் இது படப்பிடிப்பிற்காக எடுக்கப்பட்ட புகைப்படமா? என சந்தேக கேள்விகளை எழுப்பி இருந்தனர்.திருமணம் ஆனதில் இருந்து, தனி ஜெட்டில் ஹனி மூன், குலதெய்வ கோயில் வழிபாடு, ஃபாரின் ட்ரிப் என படு குஷியாக இருக்கும் இந்த ஜோடி, அவ்வபோது மிகவும் ரொமான்டிக் புகைப்படங்கள் சில வற்றையும் வெளியிட்டு, தங்களுடைய மகிழ்ச்சியான தருணங்களை ரசிகர்களுடன் ஷேர் செய்து வருகின்றனர்.
இது தவிர இருவரும் தமது கெரியரில் பிஸியாக கவனம் செலுத்தி வருகின்றனர்.இந்த நிலையில் ரவீந்தர் நேற்றைய தினம் தனது பிறந்தநாளைக் கொண்டாடினார். இவருக்கு திரையுலகைச் சேர்ந்த பிரபலங்கள் பலரும் வாழ்த்துத் தெரிவித்திருந்தனர்.
இப்படியான நிலையில் ரவீந்தரின் பிறந்த நாள் கொண்டாட்டப் புகைப்படங்கள் வெளியாகியுள்ளது.தன்னுடைய மனைவியுடன் ரவீந்தர் சிறப்பாகக் கொண்டாடியிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Listen News!