பல படங்களை தயாரித்தும் விநியோகம் செய்து வரும் ரவீந்தர் சமீபத்தில் மஹாலக்ஷ்மியை திருமணம் செய்து இருப்பதாக ரசிகர்களுக்கு தெரிவித்து இருந்தார் .இவர்களது திருமணத்திற்கு பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வந்தாலும் சமூக வலைதளத்தில் திருமணத்தை அதே அளவு விமர்சனம் செய்தும் வருகிறார்கள்.
இவர்கள் இருவருக்கும் இது இரண்டாவது திருமணம்.அத்தோடு மஹாலக்ஷ்மிக்கு முதல் திருமணத்தின் மூலம் ஒரு குழந்தையும் உள்ளது.
இந்நிலையில் ரவீந்தர் மற்றும் சீரியல் நடிகை மஹாலக்ஷ்மி இருவரும் தற்போது தொடர்ச்சியாக பேட்டிகள் கொடுத்து வருகிறார்கள்.ரவீந்தரிடம் இருக்கும் பணத்திற்காக தான் மஹாலக்ஷ்மி அவரை திருமணம் செய்துகொண்டார் என பலரும் வைக்கும் விமர்சனத்திற்கும் அவர்கள் பேட்டிகளில் அதற்கான பதிலடி கொடுத்து வருகின்றனர்.
நடிகை வனிதா விஜயகுமார் அவர்கள் திருமணம் பற்றி பேசும்போது 'Karma is a b***h' என ஒரு பதிவை போட்டு இருந்தார். வனிதா பீட்டர் பாலை திருமணம் செய்த போது அவரது முதல் மனைவிக்கு ஆதரவாக பேசி அந்த சர்ச்சையை பெரிதாகியவர் ரவீந்தர் தான். அந்த கர்மா தான் ரவீந்தருக்கு தற்போது திரும்பி வந்திருக்கிறது என வனிதா மறைமுகமாக தெரிவித்து இருக்கிறார் என நெட்டிசன்கள் கூறி வந்தனர்.
இது பற்றி ரவீந்தர் தற்போது பதிலடி கொடுத்து லைவ் விடியோவில் பேசி உள்ளார்.
"அவர் (வனிதா) போட்ட ட்விட்டை நான் படித்தேன். குர்மா இஸ் மை.. என எதோ எழுதி இருந்தார். அது என் வாயில் கூட நுழையவில்லை . அதை பற்றி பேச எதுவும் இல்லை, என் வாழ்க்கை யாருடைய கண்ணீரிலும் தொடங்கவில்லை" என கூறி இருக்கிறார். இது தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.
Listen News!