• Sep 20 2024

வீட்டிற்கு வந்த மூதேவி கணவனை ஜெயிலுக்கு அனுப்பிட்டா... மகாலட்சுமியை திட்டித் தீர்க்கும் ரவீந்தர் குடும்பம்... பயில்வான் கூறிய பரபரப்புத் தகவல்..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

தயாரிப்பாளராக பலராலும் அறிப்பட்டவர் தான் ரவீந்தர். இவர் நட்புன்னா என்னனு தெரியுமா, முருங்கைக்காய் சிப்ஸ் போன்ற படங்களை தயாரித்தவர் 


இவர் சீரியல் நடிகை மகாலட்சுமியை போன வருடம் திருமணம் செய்து கொண்டார். சிலர் வாழ்த்து கூறி இருந்தாலும் பலர் எதிர்மறை விமர்சனக்கருத்தையே முன்வைத்தார்கள். ஆனாலும் இத்தம்பதி அவ்வாறாக விமர்சனங்களுக்கு செவி சாய்க்காது தமது வாழ்க்கையை மிகவும் சந்தோசமாக முன்னெடுத்து வருகின்றனர்.

இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் ஒரு மோசடி வழக்கில் ரவீந்தரை போலீசார் கைது செய்திருக்கின்றனர். அதாவது திடக்கழிவுகளை ஆற்றலாக மாற்றும் ஒரு ப்ராஜெக்ட்டில் முதலீடு செய்தால் அதிக பணம் தருவதாக 16 கோடி ருபாய் அளவுக்கு ஏமாற்றி இருப்பதாக அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டமையை தொடர்ந்து இவர் கைது செய்யப்பட்டார்.


இதனைத் தொடர்ந்து பலரும் பல விதமான விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர். அந்தவகையில் பிரபல சினிமா விமர்சகரான பயில்வான் ரங்கநாதன் பரபரப்புக் கருத்து ஒன்றினை வெளியிட்டுள்ளார். அதாவது ரவீந்தர் வீட்டில் "வீட்டிற்கு மகாலட்சுமி வந்தால், ஓஹோ என குடும்பம் இருக்கும் என சொல்வதற்கு பதிலாக, வீட்டிற்கு மூதேவி வந்து புருஷனை ஜெயிலுக்கு அனுப்பிட்டா" என்று மகாலட்சுமியைக் குத்திக் காட்டிப் பேசி வருவதாக அவர் தெரிவித்துள்ளார். 

Advertisement

Advertisement