• Sep 20 2024

கம்பி எண்ணும் ரவீந்தர்... தனிமையில் வாடும் மகாலட்சுமி... கணவன் பிரிவினால் மனைவி வெளியிட்ட பதிவு..!

Prema / 11 months ago

Advertisement

Listen News!

தமிழில் ‘நட்புன்னா என்ன தெரியுமா, சிப்ஸ்' போன்ற படங்களை தயாரித்து மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர் ரவீந்தர். இவரை சினிமா தயாரிப்பளராக தெரிந்ததை விட பலருக்கும் பிக்பாஸ் விமர்சகராக தான் அதிகம் தெரியும். அதிலும் வனிதா பங்கேற்ற பிக்பாஸ் சீசனில் இவர் கூறிய விமர்சனங்கள் பெரியளவில் வைரலானது.


இவர் சீரியல் நடிகை மகாலட்சுமியை போன வருடம் திருமணம் செய்து கொண்டார். இவர்கள் இருவருக்குமே இது மறுமணம் தான். இவர்களுக்கு சிலர் வாழ்த்து கூறி இருந்தாலும் பலர் எதிர்மறை விமர்சனக்கருத்தையே முன்வைத்தார்கள். ஆனாலும் இத்தம்பதி அவ்வாறாக விமர்சனங்களுக்கு செவி சாய்க்காது தமது வாழ்க்கையை மிகவும் சந்தோசமாக முன்னெடுத்து வருகின்றனர்.


இந்நிலையில் சமீபத்தில் ஒரு மோசடி வழக்கில் ரவீந்தரை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர் மீது வழக்கு பதிவு செய்து எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு புழல் சிறையில் அடைத்துள்ளனர். இதனையடுத்து பலரும் "மகாலட்சுமி வீட்டிற்கு வந்த நேரம் சரியில்லை, அதனால் தான் ரவீந்தர் ஜெயிலுக்கு போய் விட்டார்" என எதிர்மறையான கருத்துக்களை பதிவிட்டு வந்திருந்தனர்.


இதனையடுத்து தற்போது மகாலட்சுமி தனது இன்ஸ்டா பக்கத்தில் ஒரு சில புகைப்படங்களை வெளியிட்டிருக்கின்றார். அதில் "ஒவ்வொரு கணமும் என் இதயம் உன்னைத் தேடுகிறது" எனப் பதிவிட்டிருக்கின்றார். இதனைப் பார்த்த ரசிகர்கள் ரவீந்தர் பிரிவினால் வாடும் மகாலட்சுமிக்கு தங்களது ஆறுதலினைத் தெரிவித்து வருகின்றனர்.


Advertisement

Advertisement