நடிகர் விஜய்யுடன் இணைவது உங்களுக்கு மகிழ்ச்சி என்றால் நாங்கள் இரண்டு பேரும் இணைந்து செயல்படத் தயார் என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார்.
கூட்டமொன்றில் பங்கேற்ற நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களிடம் கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார். மேலும் அவர் கூறுகையில்,
எந்த காலத்திலும் தேசிய, திராவிட கட்சிகளுடன் கூட்டணி என்பது கிடையவே கிடையாது. நடிகர் விஜய்யுடன் இணைவது உங்களுக்கு மகிழ்ச்சி என்றால் நாங்கள் இரண்டு பேரும் இணைந்து செயல்படத் தயார்.
ஆனால் அவர் வர வேண்டும், கட்சி ஆரம்பிக்க வேண்டும், அவரது கொள்கைகளை பற்றி சொல்ல வேண்டும்.மேலும் நான் தான் முன்னாடி நிற்கும் அண்ணன். அவர் தான் என்னோடு வருவதா இல்லையா என்பதை முடிவு செய்ய வேண்டும், நான் போய் கேட்க முடியாது, அவர் கட்சி ஆரம்பிக்கும்போது அவரிடம் நாம் தமிழர் கட்சியுடன் இணைந்து பணியாற்றுவீர்களா என அவரிடம் கேளுங்கள். என்று தெரிவித்துள்ளார்.
Listen News!