• Sep 20 2024

ரோஜாவின் மகளுக்கு கிடைத்த அங்கீகாரம்-வைரலாகும் புகைப்படம்..!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

1990 களில் தமிழ், தெலுங்கு துறைகளில் முன்னணி நடிகையாக வலம்வந்தவர் நடிகை ரோஜா.தொடர்ந்து சூப்பர் ஸ்டார் ரஜினி, பிரபுதேவா, சரத்குமார் இப்படி பெரிய நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்து தமிழகத்தின் நம்பர் ஒன் நடிகையாக வலம்வந்தார் நடிகை ரோஜா.

ரோஜா பிரபல நடிகையாக வலம் வந்த போது, இயக்குநர் செல்வமணியும், நடிகை ரோஜாவும் காதலித்து திருமணம் செய்து கொண்டார்கள்.இவர்களின் மகள் தான் அன்ஷு மாலிகா.

இவர் இளம் வயதிலேயே தனது திறமையை சிறப்பாக வெளிப்படுத்தி வருகிறார். வெப் டெவலப்பர் மற்றும் கண்டெண்ட் ரைட்டர் திறமையை வெளிப்படுத்தியதோடு, சிறந்த எழுத்தாளராகவும் தனது திறமையை வெளிப்படுத்தியுள்ளார்.

அன்ஷு மாலிகா எழுதிய “தி ஃப்ளேம் இன் மை ஹார்ட்” என்ற புத்தகம் ‘ஜி டவுன் என்ற இதழில் வெளியானதை அடுத்து தென்னிந்தியாவின் சிறந்த எழுத்தாளருக்கான விருது கிடைத்துள்ளது. மேலும் அமைச்சர் ரோஜாவின் மகளுக்கு இந்த அரிய விருது இளம் வயதில் கிடைத்துள்ளதை அடுத்து அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.

எனினும் சமீபத்தில் கொல்கத்தாவில் நடந்த விருது வழங்கும் விழாவில் பிரபல பாலிவுட் நடிகை சஜன் இந்த விருதை ரோஜாவின் மகள் அன்ஷு மாலிகாவுக்கு அளித்தார். இது குறித்த புகைப்படங்களை தனது சமூக வலைதளத்தில் ரோஜா பதிவு செய்துள்ள நிலையில் அந்த புகைப்படம் வைரலாகி வருகிறது.

நடிகை ரோஜா தனது வாழ்க்கையை திரைப்பட நடிகையாக தொடங்கி அதன்பின் அரசியலிலும் பல ஏற்ற இறக்கங்களை பெற்றார். தற்போது ஆந்திர மாநில அமைச்சராகவும் அவர் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. ரோஜாவின் மகளும் திரையுலகிற்கு வர வாய்ப்பு இருந்தாலும் அவர் விருப்பப்படி செல்ல நாங்கள் அனுமதித்து உள்ளோம் என ரோஜா - செல்வமணி தம்பதியினர் கூறியினர்.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement