• Sep 21 2024

20 வருடங்களுக்கு பிறகு மீண்டும் கதாநாயகியாகும் நடிகை ரேகா ...புதிய திரைப்படத்தின் டைட்டில் இது தானா?

Jo / 1 year ago

Advertisement

Listen News!

 பாரதிராஜா இயக்கத்தில் 1986ம் ஆண்டு சத்யராஜ் சின்னப்பதாஸ் ஆக நடித்த கடலோர கவிதைகள் படத்தில் ஜெனிஃபர் டீச்சராக நடித்து ஒட்டுமொத்த தமிழ் சினிமா ரசிகர்கள் மனதையும் கொள்ளையடித்தவர் நடிகை ரேகா.

உலக நாயகன் கமல் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் சீசன் 4ல் கலந்து கொண்ட ரேகா நடிக்க உள்ள இந்த படத்தில் அனிதா சம்பத்தும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார் என்ற தகவலும் வெளியாகியுள்ளது.அந்த படத்தின் பூஜை மற்றும் தொடக்க விழா நிகழ்ச்சியில் சமீபத்தில் நடைபெற்றுள்ளன.

 தொடர்ந்து கமல்ஹாசன் உடன் புன்னகை மன்னன் படத்தில் நடித்த ரேகா எங்க ஊரு பாட்டுக்காரன், செண்பகமே செண்பகமே உள்ளிட்ட பல படங்களில் ராமராஜனுக்கு ஜோடியாக நடித்துள்ளார்.

தற்போது  சின்னத்திரை தொடர்களில் முக்கிய கதாபாத்திரங்கள் நடித்து வருகிறார்.குறிப்பாக பாரதி கண்ணம்மா சீரியலில் வில்லி வெண்பாவின் அம்மாவாகவும் நடித்து அசத்தியிருந்தார்.

இந்நிலையில், அறிமுக இயக்குநர் மாலதி நாராயண் இயக்கத்தில் தயாராகும் முதல் திரைப்படம் 'மிரியம்மா' என்பதாகும் . இதில் மூத்த நடிகை ரேகா கதையின் நாயகியாக நடிக்கிறார். இவருடன் எழில் துரை, சினேகா குமார், அனிதா சம்பத், விஜே ஆஷிக், மாலதி நாராயண் ஆகியோர் நடிக்கிறார்கள்.

ஜேசன் வில்லியம்ஸ் ஒளிப்பதிவு செய்ய, இந்த திரைப்படத்தில் இடம் பெறும் பாடல்களுக்கு ஏ. ஆர். ரெஹைனா இசையமைக்கிறார். படத்தொகுப்பு பணிகளை கமல் கவனிக்க, கலை இயக்க பணிகளை 'யாத்திசை' புகழ் ரஞ்சித் மேற்கொள்கிறார். பெண்களை மையப்படுத்தி தயாராகும் இந்த திரைப்படத்தை 72 ஃபிலிம்ஸ் எனும் பட நிறுவனம் சார்பில் இயக்குநரான மாலதி நாராயண் தயாரிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.



Advertisement

Advertisement