• Sep 20 2024

சொந்த ஊரிலும் மாரிமுத்துவின் உடலுக்கு அஞ்சலி செலுத்தும் உறவுகள்- தீவிரமாக நடந்து வரும் இறுதிச் சடங்கு ஏற்பாடுகள்

stella / 1 year ago

Advertisement

Listen News!

இயக்குநர் மிஷ்கின் இயக்கத்தில் வெளியான யுத்தம் செய் படத்தின் மூலம் நடிகராக அறிமுகமாகியவர் தான் மாரிமுத்து.இதனை அடுத்து இவர் பரியேறும் பெருமாள், ஜெய்பீம் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். அண்மையில் வெளியான ஜெயிலர் படத்தில், முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தார்.

இந்நிலையில், நேற்று காலை எதிர்நீச்சல் சீரியலுக்காக டப்பிங் பேசிக் கொண்டிருந்தார். அப்போது, அவருக்கு வியர்த்துள்ளது இதனால், வந்துவிடுகிறேன் என கூறிவிட்டு வெளியே வந்த மாரிமுத்து, அவரே காரை ஓட்டி கொண்டு வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சென்றுள்ளார். அப்போதுஅவரை மருத்துவர்கள் பரிசோதனை செய்து கொண்டு இருக்கும் போதே அவரது உயிர்பிரிந்துள்ளது.


இதையடுத்து, மாரிமுத்துவின் சாலிகிராமத்தில் உள்ள அவரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்தது. இதில் நடிகர் எஸ்.ஜே.சூர்யா, பிரசன்னா, விமல், ராமேஷ் கண்ணா, நடிகை சரண்யா பொண்வண்ணன் மற்றும் இயக்குநர்கள் பாண்டியராஜ், வசந்த் மற்றும் எதிர்நீச்சல் சீரியலில் நடித்த அனைத்து நடிகர்களும் வந்திருந்து அவருக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர். 


இதையடுத்து நேற்றிரவு ஆம்புலன்ஸ் மூலம் அவரது உடல் சொந்த ஊரான தேனி மாவட்டம் பசுமலைத் தேரிக்கு கொண்டு செல்லப்பட்ட உடல் அதிகாலை 6 மணிக்கு வந்து சேர்ந்தது. அவரது உடலுக்கு பொதுமக்கள், உறவினா்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனா். அவரது இறுதிச் சடங்குகள் இன்று நடைபெறும் என்று அவரது மகன் அகிலன் தெரிவித்து உள்ளார்.


Advertisement

Advertisement