• Sep 21 2024

எஸ்.ஜே.சூர்யாவை மிரள வைத்த ‘ரெமோ’ இயக்குனர்.. மீண்டும் ஹீரோவாகும் நடிப்பு அரக்கன்..!

Sivalingam / 6 months ago

Advertisement

Listen News!

கார்த்தி நடித்தசுல்தான்மற்றும் சிவகார்த்திகேயன் நடித்தரெமோஆகிய இரண்டு படங்களை மட்டுமே இயக்கிய இயக்குனர் பாக்யராஜ் கண்ணன், கடந்த எட்டு ஆண்டுகளாக திரைப்பட வாய்ப்பு இல்லாமல் இருந்த நிலையில் தற்போது ஒரு திரைப்படத்தை இயக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

சுல்தான்’ ’ரெமோஆகிய இரண்டு படங்களுமே வசூல் அளவில் பெரிய வெற்றி பெறவில்லை என்பதால் இயக்குனர் பாக்யராஜ் கண்ணனுக்கு கடந்த சில ஆண்டுகளாக படங்கள் இயக்குவதற்கு எந்த வாய்ப்பும் கிடைக்கவில்லை. இருப்பினும் மீண்டும் சினிமாவில் ஜெயித்தே ஆக வேண்டும் என்ற வெறியில் ஒரு அட்டகாசமான கதையை பாக்யராஜ் கண்ணன் எழுதியுள்ளதாகவும் அந்த கதைக்கு பொருத்தமானவர் எஸ்ஜே சூர்யா தான் என்றும் அவர் நடிக்க ஒப்புக்கொள்ளவில்லை என்றால் இந்த படமே இயக்கப் போவதில்லை என்றும் தனது நட்பு வட்டாரத்தில் கூறியிருந்தாராம்.


இந்த நிலையில் சமீபத்தில் எஸ்ஜே சூர்யாவை சந்தித்து அவர் கதை சொன்ன போது எஸ்.ஜே.சூர்யா, கதையை கேட்டு மிரண்டு விட்டாராம். கண்டிப்பாக நாம் இந்த படத்தை பண்ணுவோம், பிசியாக இருந்தாலும் உங்களுக்காக நான் கால்ஷீட் ஒதுக்கி தருகிறேன், நீங்கள் ஆரம்பகட்ட பணியை தொடங்குங்கள்என்று எஸ்ஜே சூர்யா வாக்குறுதி அளித்து இருப்பதாகவும் இதனை அடுத்து இந்த படத்தின் பணிகள் தொடங்க திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

தமிழ் திரை உலகின் முன்னணி தயாரிப்பு நிறுவனம் ஒன்று இந்த படத்தை தயாரிக்க உள்ளதாகவும் விரைவில் இந்த படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்றும் கூறப்படுகிறது. எஸ்ஜே சூர்யா தற்போது பல திரைப்படங்களில் வில்லனாக நடித்துக் கொண்டிருக்கும் நிலையில் மீண்டும் ஒரு மிரட்டலான ஹீரோ வேடத்தில் நடிக்க போகிறார் என்பது அவரது ரசிகர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தியாகும்.

Advertisement

Advertisement