சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான ஹிட் சீரியல்களில் ஒன்று 'எதிர்நீச்சல்'. ஏனைய சீரியல்களை விடவும் இந்த சீரியலிற்கு என ஏராளமான ரசிகர்கள் கூட்டம் உண்டு. தினம் தினம் இந்த சீரியலானது அடுத்து என்ன நடக்கப் போகிறது என்ற எதிர்பார்ப்பை தூண்டிய வண்ணம் தான் இருக்கின்றது.
அதில் குணசேகரன் "ஆதிரைக்கும், கரிகாலனுக்கும் நடக்கப் போகிற கல்யாணத்தில் எங்களால் எந்தப் பிரச்சினையும் வராது என்று சத்தியம் பண்ணுங்க" எனக் கேட்கின்றார். அதற்கு ரேணுகா "சத்தியமா, அதை நாங்க எதுக்குப் பண்ணனும்" எனக் கேட்கின்றார்.
மறுபுறம் கரிகாலன் தன்னுடைய நண்பன் எடுத்த போட்டோவை பார்த்துக் கொண்டிருக்க அதன் பின்னாடி அருண் இருப்பதை பார்த்து ஷாக்காக அனைவரும் அதிர்ச்சி அடைகின்றனர். இவ்வாறாக இந்தப் ப்ரோமோ வீடியோ வெளியாகி இருக்கின்றது.
Listen News!