• Sep 21 2024

“தற்கொலை செய்ய போனேன்…CWC பார்த்ததிற்கு அப்புறம்..” அதிர்ச்சி தகவலை வெளியிட்ட புகழ்…!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

தமிழில் முக்கிய தொலைக்காட்சிகளில் ஒன்றான விஜய் டிவியில் சூப்பர் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் நிகழ்ச்சி தான் குக்வித் கோமாளி. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் பிரபல்யமானவர் தான் புகழ். இந்த நிகழ்ச்சியைத் தொடர்ந்து இவருக்கென்று தனி ரசிகர் பட்டாளமே உள்ளது.

மேலும் இந்த நிகழ்ச்சியில் பிரபல்யமானதை அடுத்து தற்பொழுது பல முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் நடித்து வருவதோடு கதாநாயகனாகவும் நடிப்பதற்கு கமிட்டாகி உள்ளார்.

ஹீரோவாக வந்து விட்டாலும் தன்னை வளர்த்து விட்ட விஜய் டிவியை மறக்காமல் புகழ் தற்போது குக் வித் கோமாளி 3ம் சீசனுக்கு அவ்வப்போது வந்து செல்கிறார்.

இவ்வாறு இருக்கையில் இதில் நடுவராக இருக்கும் வெங்கடேஷ் பட் பகிர்ந்த விடயம் சோசியல் மீடியாவில் லைரலாகி வருகையில் தற்போது புகழ் பகிர்ந்த விடயம் தீயாய் பரவி வருகின்றது.அது என்னவென்றால் இந்த நிகழை்ச்சியை பார்த்தவர்களுக்கு பல நன்மைகளே நடந்துள்ளதாம்.அந்த வகையில் ஒரு ரசிகர் புகழிற்கு மெசேஞ் அனுப்பியுள்ளார்.

அதாவது நான் தற்கொலை செய்ய போனேன். அப்பொழுது குக்வித் கேமாளி நிகழ்ச்சியின் ப்ரமோ வெளியானது அதை பார்த்திட்டு போகலாம் என நினைத்தேன்.அதன் படி அதை பார்த்திட்டு வயிறு குலுங்க சிரித்தேன் .எனக்கு தற்கொலை பண்ணிக்கிற எண்ணமே போயிடுச்சு என்று புகழிற்கு மெசேஞ் பண்ணியுள்ளார்.இதைப் பார்த்ததும் நான் அழுதிட்டேன் என புகழ் கூறினார்.அத்தோடு இந்த நிகழ்ச்சியில் நாம என்ன பண்ணிட்டோம் எனவும் தோணும்.ஆனா அவங்களுக்காகவே நாம இன்னமும் பண்ணுவோம் என கண்கலங்கி இந்த விடயத்தை பகிர்ந்துள்ளார்.

Advertisement

Advertisement