ஜீ தமிழ் தொலைக்காட்சியில் கடந்த 2021ஆகஸ்ட் 23 முதல் ‘நினைத்தாலே இனிக்கும்’ சீரியல் ஒளிபரப்பாகி வருகின்றது.
இதில் நடிகர் ஆனந்த் செல்வன், பணக்கார குடும்பத்தில் பிறந்தவராக சித்தார்த் என்ற கேரக்டரில் தனது நடிப்பின் மூலம் பட்டையை கிளப்பி வருகிறார். இவருக்கு ஜோடியாக நடிகை ஸ்வாதி ஷர்மா, பொம்மி என்ற கேரக்டரில் நடித்து வருகின்றார்.
மேலும் ஜீ தமிழின் பல சீரியல்கள் டீ.ஆர்.பி ரேட்டிங்கில் பட்டையை கிளப்பி வருகின்றன. மக்களின் மனதில் தனி இடம் பிடித்த அப்படிப்பட்ட சீரியல்களில் ஒன்றாக இருந்து வருகிறது நினைத்தாலே இனிக்கும்.
குறுகிய காலகட்டத்தில் மக்களின் மனதை கவர்ந்த சீரியல் தான் நினைத்தாலே இனிக்கும் .இவ்வாறு இருக்கையில் இந்த சீரியலில் புதிதாக ஒரு பிரபலம் இணைய உள்ளார்.
அவர் வேற யாருமில்லை ரிஷி.இவர் ஒரு இந்திய திரைப்பட, நாடக, தொலைக்காட்சி நடிகர் ஆவார். இவர் சன் தொலைக்காட்சியின் டீலா நோ டீலா நிகழ்ச்சியில் பணியாற்றியதற்காக சிறப்பாக அறியப்படுகிறார்.
மேலும் எண்டெமால் இந்தியாவுடனான இவரது இரண்டாவது கதையல்லாத நிகழ்ச்சியாக சன் தொலைக்காட்சியில் கையில் ஒரு கோடி என்ற நிகழ்ச்சியிலும் தோன்றினார்.
Listen News!