• Sep 20 2024

ராபர்ட் மற்றும் ரச்சிதா இருவருக்கும் ஒரே கட்டிலில் படுக்கையா..? முகம் சுழிக்கும் ரசிகர்கள்..!

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

பிக்பாஸ் நிகழ்ச்சி ஆரம்பமாகி விறுவிறுப்பானகட்டத்தை நோக்கி நகருகின்றது.21 போட்டியாளர்களுடன் தொடங்கிய இந்நிகழ்ச்சியில் இதுவரை 5 பேர் வெளியேறிவிட்டதால் 16 பேர் மட்டுமே எஞ்சியுள்ளனர்.

இதுவரை சாந்தி, அசல் கோளாறு, ஷெரினா மற்றும் மகேஸ்வரி ஆகியோர் குறைந்த வாக்குகளைப் பெற்று எலிமினேட் செய்யப்பட்டுள்ளனர். அதேபோல் ஜிபி முத்து சொந்த காரணங்களுக்காக பாதியிலேயே வெளியேறினார்.

அந்தவகையில் பிக்பாஸ் எந்த சீசன் எடுத்தாலும் அதில் காதல் ஜோடி என்று இருப்பார்கள். தமிழில் ஓடும் பிக்பாஸ் இல்லை எந்த மொழி பிக்பாஸ் எடுத்தாலும் ஒவ்வொரு சீசனிலும் காதல் ஜோடி வந்துவிடுவார்கள்.

மேலும் அப்படி இந்த 6வது பிக்பாஸ் சீசனில் காதல் ஜோடியாக மாறப்போவது யார் என ரசிகர்கள் ஆர்வமாக பார்க்கிறார்கள், ஆனால் இன்னும் யாரும் இணையவில்லை.இடையில் ராபர்ட் மாஸ்டர் மட்டும் ரச்சிதா மீது தனது காதலை வெளிப்படுத்தி வருகின்றார்.


எனினும் இப்போது பிக்பாஸில் அரண்மனை டாஸ்க் நடக்கின்றது, குசும்புக்கார பிக்பாஸ் ராபர்ட் மற்றும் ரச்சிதாவை ராஜா-ராணியாக மாற்றியுள்ளார். அத்தோடு அரசு குடும்பத்தினர் தூங்குவதற்கு ஒரு கட்டில் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் அதில் தான் ராஜா மற்றும் ராணி உறங்க வேண்டுமென படைத்தலைவன் அசீம் சொல்கிறார்.

இதைக்கேட்டதும் ராபர்ட் முகத்தில் புண்சிரிப்பு வர ரச்சிதாவோ கோபப்பட்டு நான் இதில் படுக்க முடியாது எனக்கு தனி பெட் வேண்டுமென சொல்கிறார்.

Advertisement

Advertisement