பிக்பாஸ் வீட்டுக்கு வந்த நடன இயக்குநரான ரொபேர்ட் மாஸ்டர் சீரியல் நடிகை ரச்சிதாவை பார்த்ததுமே உடனே காதலில் விழுந்து விட்டார். ரச்சிதா பிக்பாஸ் வீட்டில் எந்த டீமுக்கு சென்றாலும் உடனே அந்த டீமில் இவரும் ஐக்கியமாகி விடுகிறார்.
அதுமட்டுமல்லாது ரச்சிதாவை ஓர கண்ணால் பார்ப்பது, துரத்தி துரத்தி சைட் அடிப்பது இவற்றையே முழுநேர வேலையாக செய்து வருகிறார் ராபர்ட் மாஸ்டர்.
இவரின் நடத்தைகள் வீட்டிற்குள் இருக்கும் போட்டியாளர்கள் அனைவருக்கும் தெரியும் என்பதால் அவர்கள் இருவரையும் அவ்வப்போது கிண்டலடித்து வருகின்றனர்.
வீட்டில் கிண்டல், கலாய்ப்புக்கள் அதிகமானதால் கடுப்பான ரச்சிதா "மாஸ்டர் ரொம்ப ஓவரா போறீங்க, வீட்டில் அனைவரிடமும் அன்பா அழகாக பேசுறீங்க, அப்புறம் என்கிட்ட மட்டும் ஏன் இப்படி பேசுறீங்க நார்மலா இருங்க மாஸ்டர். எனக்கு உங்கள் மீது எந்த பீலிங்கும் வரவில்லை" என்று வெளிப்படையாகவே கூறிவிட்டார் ரச்சிதா.
இந்நிலையில் தற்போது வெளியாகி உள்ள வீடியோ ஒன்றில் கொஞ்சம் என்னை அட்ஜஸ்ட் பண்ணுங்கோ என்று கூறியுள்ளார்மாஸ்டர். மேலும் அதில் "நடிச்சு தான் ஆகணும்னு இருக்கேளா, அப்போ என்னை பிடிக்காவிட்டாலும் கொஞ்சம் பிடிக்கிற மாதிரி நடித்து அட்ஜஸ்ட் பண்ணுங்கோ, ஏதோ பைத்தியம் சொல்லுதுனு நினைச்சி என்னிடம் நடி" என்கிறார் குழந்தை மாதிரி மாஸ்டர்.
இதற்கு பதிலளித்த ரச்சிதா "இது பிக்பாஸ் வீடு, நான் இங்க நடிக்க வரவில்லை. இது நடிப்புக்கான மேடை இல்லை என்பது உங்களுக்கு தெரியாதா" என்றார். உடனே குறுக்கிட்ட மாஸ்டர் "ஐயையோ நான் அப்படி சொல்லவில்லை, புடிக்காதவங்க வந்து பேசும்போது ஹாய், ஹலோனு சொல்லலாமே" என்று கூற, உடனே குறுக்கிட்ட ரச்சிதா "அது தப்பு மாஸ்டர், பின்னாடி ஒன்னு, முன்னாடி ஒருவிதமாக இருக்கும் அப்படி பண்ணக்கூடாது" என்று தனக்கு பிடிக்கவில்லை என்பதை நேராகவே சொல்லி விட்டார்.
இவ்வாறாக ரச்சிதா அவர் நிலையில் ஸ்ட்ராங்காக இருக்கிறார். ஆனால் மாஸ்டர் தொடர்ந்து காதல் பீலிங்கில் அவருக்கு தொல்லை கொடுத்து வருகிறார். இவருக்கு விளக்கம் சொல்லியே ரச்சித்தா நொந்து நூலாகி விட்டார். இதனால் மாஸ்டரை கமல் தான் கண்டிக்க வேண்டும்.
ஏனெனில் ரச்சிதா ஏற்கனவே கணவரை பிரிந்து மனவேதனையில் இருக்கிறார். ஆகவே இவர் இப்படி நடந்து கொள்வதால், ரச்சித்தாவின் வாழ்க்கை தான் மென்மேலும் பாதிக்கும் என பிக்பாஸ் பார்வையாளர்கள் பலரும் புலம்பி வருகின்றனர்.
Listen News!