• Sep 20 2024

விஜயாவை ஏமாற்றி பத்து லட்சம் பணத்தை வாங்கிய ரோகினி- மனோஜின் திருமணம் நடைபெறுமா?- பரபரப்பான ப்ரோமோ

stella / 1 year ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் சிறகடிக்க ஆசை. இந்த சீரியல் ஆரம்பித்த நாளிலிருந்து விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாமல் ஓடிக் கொண்டிருக்கின்றது எனலாம்.

அந்த வகையில் தற்பொழுது விஜயா மனோஜிற்கு எப்படியாவது திருமணம் செய்து வைத்து விட வேண்டும் என்பதற்காக ரோகினியை பெண் பார்த்து வைத்துள்ளார். ரோகினியும் தான் முதலில் திருமணம் முடித்ததை மறைத்து த்னுடைய அப்பா மலேசியாவில் இருப்பதாகவும் பொய் சொல்லி வைத்திருக்கின்றார்.

இப்படியான நிலையில் தற்பொழுது ஓர் ப்ரோமோ வெளியாகியுள்ளது. அதில் ரோகினி மனோஜை இப்போதைக்கு திருமணம் செய்ய வேணாம் என்று யோசிக்கிறேன். இன்னும் இரண்டு வருஷம் போனதுக்கு பிறகு கல்யாணம் பண்ணிக்கிறேன். நான் பியூட்டி பார்லர் வைக்கணும் என்று சொல்ல விஜயா அதிர்ச்சியடைகின்றார்.

அத்தோடு உனக்கு பார்லர் தானே வைக்கணும் அதற்கு நானே காசு தருகிறேன் என்று வீட்டுப் பத்திரத்தை அடைவு வைதது பத்து லட்சம் பணத்தைக் கொடுக்கின்றார். பணத்தைக் கொடுத்து விட்டு யோசிக்கின்றார். இது குறித்த ப்ரோமோ வெளியாகியுள்ளதைக் காணலாம்.



Advertisement

Advertisement